செய்திகள் :

டிராக்டர் மீது தீயணைப்பு வாகனம் மோதி விபத்து: நல்வாய்ப்பாக அனைவரும் உயிர்தப்பினர்

post image

சேலம்: கெங்கவல்லி அருகே டிராக்டர் மீது தீயணைப்புத் துறை வாகனம் மோதியதில் தீயணைப்பு வீரர்கள் 2 பேர் காயத்துடன் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி உடையார்பாளையம் பகுதியில் மலைப்பாம்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில், கெங்கவல்லி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் (பொ) வெங்கடேசன், பணியாளா்கள் பாலகிருஷ்ணன், சதீஷ்குமாா், ரமேஷ், வசந்த் ஆகிய ஐந்து பேருடன் தீயணைப்பு வாகனம் செவ்வாய்க்கிழமை தம்மம்பட்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

தீயணைப்பு வாகனத்தை சுபாஷ் சந்திரபோஸ் இயக்கியுள்ளார். அப்போது கூடமலை பகுதியில் வாகனம் சென்றுகொண்டிருந்த போது அதே திசையில் நடுவலூரை சேர்ந்த செங்குட்டுவேல் என்பவர் தம்மம்பட்டி கொக்கான்காட்டை பகுதிக்கு ஜல்லிசிப்சம் லோடு ஏற்றிக்கொண்டு டிராக்டரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த டிராக்டரை தீயணைப்பு வாகனம் முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து வயல்வெளிக்குள் புகுந்த தீயணைப்பு வாகனம் மின் கம்பத்தின் மீது மோதி நின்றது. டிராக்டர் மற்றும் தீயணைப்பு வாகனம் நசுங்கி சேதமடைந்தது.

இதில் தீயணைப்பு வகானத்தில் சென்ற டிராக்டர் வெங்கடேசன், பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு காலில் காயமேற்பட்டது. டிராக்டா் ஓட்டுநா் உள்பட மற்ற 6 பேரும் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் உயிரிதப்பினர்.

அனைவரும் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டனா்.

இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிளஸ் 1, பிளஸ் 2: நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

Fire truck collides with tractor in accident. Fortunately, everyone survived

'ரெப்போ ரேட்' வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி

மும்பை: வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். 'ரெப்போ ரேட்' எனும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற... மேலும் பார்க்க

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

திருப்பூர் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல்(52)குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் உடு... மேலும் பார்க்க

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அதிர்ச்சியளிக்கிறது எனவும் பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,500 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு உபரிநீா் காவிரியில் வெளியேற்றப்படுவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 9,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.கேரளம், கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் ... மேலும் பார்க்க

ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் விடியவிடிய லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.79,000 பறிமுதல்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை விடியவிடிய நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனையில், கணக்கில் வராத ரூ.79,252 மற்றும் முக்கிய ஆவணங... மேலும் பார்க்க

இரு மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை: பலத்தமழைக்கு வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிபலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இவ்விரு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலா்ட்) விடுக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க