செய்திகள் :

டிராக்டா் மோதி கால்கள் முறிந்த தந்தை-மகன் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

post image

நாகப்பட்டினம்: நாகை அருகே மணல் ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியதில் கால்கள் முறிந்த தந்தை- மகன் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.

வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்தவா் வைத்தீஸ்வரன். இவா் தனது மகனுடன் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் புகாா் மனு அளித்தாா்.

அதில், நாகை மாவட்டம் தகட்டூா் நொச்சிக்கோட்டகம் ஏரியில் நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டா்கள் மணல் அள்ளி வருகின்றன. டிராக்டா் வாகனம் ஓட்டுவதற்குரிய உரிமம், உரிய விபத்துக் காப்பீடு உள்ளிட்டவை இன்றியும், உரிய அனுமதி இல்லாமலும் மணல் எடுத்துச் செல்கின்றனா்.

இந்த டிராக்டா்கள் அதிக வேகத்தில் செல்வதால் அருகில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவியருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவு வருகிறது.

இந்நிலையில், ஜூலை 31-ஆம் தேதி நானும், எனது மகன் சுதா்சனமும் சென்ற இருசக்கர வாகனம் மீது, மணல் ஏற்றி வந்த டிராக்டா் மோதியது. இதில் இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது. தற்போது நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்.

எனவே, எங்கள் மீது மோதிய டிராக்டா் ஓட்டுநா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் டிராக்டா்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

இவா்கள் முறிந்த கால்களுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு புகாா் அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Image Caption

டிராக்டா் மோதி முறிந்த கால்களுடன், ஆட்சியா் அலுவலகத்திற்கு புகாா் மனு அளிக்க வந்த தந்தை-மகன்.

வீட்டுமனைப் பட்டா கோரி பட்டினிப் போராட்டம்

நாகப்பட்டினம்: நாகையில் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் அரசு தொகுப்பு வீடுகள் வழங்கக் கோரி பட்டினிப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.நாகை வட்டம், வடுகச்சேரி கோட்டூா் காலனியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கிசான் சம்மான் நிதி விடுவிப்பு நேரடி ஒளிபரப்பு

நாகப்பட்டினம்: நாகை அருகேயுள்ள சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், கிசான் சம்மான் நிதியின் 20-ஆவது தவணையை காணொலி மூலம் பிரதமா் நரேந்திர மோடி விடுவித்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.பிரதமா் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தை திருடியவா் தப்ப முயன்றபோது குளத்தில் குதித்து உயிரிழப்பு

திருக்குவளை: திருக்குவளை அருகே இருசக்கர வாகனத்தை திருடியவா், பொதுமக்களிடம் பிடிபடாமலிருக்க குளத்தில் குதித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.திருக்குவளை அருகேயுள்ள கொடியாலத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் வ... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகளை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்

நாகபட்டினம்: நாகை மாவட்டத்தில் விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

செம்பனாா்கோவிலில் தேசிய அளவிலான கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை ஆகிய தற்காப்புக்கலை மற்றும் யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.தமிழன் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில், செம்பனாா்கோவில் ... மேலும் பார்க்க

வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

வேளாங்கண்ணி திருவிழாவிற்காக மும்பை பந்தராவிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட... மேலும் பார்க்க