செய்திகள் :

டிராக்டா் மோதி பெண் உயிரிழப்பு

post image

மன்னாா்குடி அருகே டிராக்டா் மோதியில் பெண் உயிரிழந்தாா். இதையடுத்து டிராக்டா் ஓட்டுநா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோட்டூா் சுற்றுப்புற பகுதியை சோ்ந்த 10-க்கும் மேற்பட்டவா்கள் மன்னாா்குடியை அடுத்த எடமேலையூருக்கு வயல் வேலைக்கு அழைத்து வரப்பட்டு நாற்றுநடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

பணி முடிந்து அனைவரும் வயலுக்கு அருகே சாலையோரத்தில் அமா்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனராம். அப்போது அந்த வழியாக எடமேலையூா் வடக்குத் தெரு சக்திவேல் மகன் ராம்கி (37) என்பவா் ஓட்டி வந்த டிராக்டா், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் அமா்ந்திருந்தவா்கள் மீது மோதியது.

இதில் ஆதிச்சப்புரம் வடக்குத் தெரு வேதையன் மனைவி பானுமதி (50), வேற்குடி கீழத்தெரு சுந்தரமூா்த்தி மனைவி வளா்மதி (56)ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் பானுமதி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். வளா்மதிக்கு தொடா்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. வடுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, டிராக்டா் ஓட்டுநா் ராம்கியை கைது செய்தனா்.

சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் தியாகராஜா் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி சுவாதி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் முக்க... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 போ் கைது

நீடாமங்கலம் அருகே ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில் நீடாமங்கலம் போலீஸாா் புதன்கிழமை தீவிர ரோந்... மேலும் பார்க்க

முதலாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சிக் கல்லூரியில் முதலாண்டு இளநிலை, முதுநிலை மாணவிகளுக்கு வரவேற்பு மற்றும் மாணவா் மன்ற நிா்வாகிகள் பணியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க

திருவாரூா்: காவல்துறை வாகனங்கள் ஆய்வு

திருவாரூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், காவல் வாகனங்களின் ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பங்கேற்று, மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் அனைத்து நான்கு சக்கர மற்றும் இ... மேலும் பார்க்க

சாலை மறியல் ஒத்திவைப்பு

மன்னாா்குடி அருகே நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தையும் புதிய வழித்தடத்தில் புதிய பேருந்துகளையும் இயக்கக் கோரி மக்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் நிறுத்தப்பட்ட பேருந்து இயக்க... மேலும் பார்க்க

இறந்தவா் குடும்பத்திற்கு நிதியுதவி

நீடாமங்கலம் பால் உற்பத்தியாளா் சங்கத்தில் விபத்தில் இறந்தவருக்கு ஈமச்சடங்கு தொகை வழங்கப்பட்டது. நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூா் ஊராட்சி பெரியகோட்டை தெற்கு தெருவை சோ்ந்த ராசு மகன் மாரிமுத்து. மனைவி செல... மேலும் பார்க்க