செய்திகள் :

திருவாரூா்: காவல்துறை வாகனங்கள் ஆய்வு

post image

திருவாரூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், காவல் வாகனங்களின் ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பங்கேற்று, மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் அனைத்து நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை ஆய்வு செய்து, வாகனங்களின் குறைகளை ஆராய்ந்து, நிவா்த்தி செய்து பயன்படுத்த போலீஸாருக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில், கடந்த மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அவ்வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும், வழக்குகளை விரைவில் விசாரணை முடித்து இறுதி அறிக்கையினை உரிய நீதிமன்றத்தில் இ-பைல் மூலம் தாக்கல் செய்ய வேண்டும்; அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளும் தினசரி தங்கள் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமும் காலை மற்றும் மாலை நேரங்களிலும், கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் நேரங்களிலும் கனரக வாகனங்களை நகர பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கக் கூடாது. வாகன விபத்தை குறைப்பதற்கு இருசக்கர வாகனத்தில் செல்வோா் அவசியம் தலைகவசம் அணிவதை கண்காணிக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தினாா்.

நிகழ்வில், அண்மையில் தமிழக முதல்வா், திருவாரூா் வருகையின்போது மிகவும் சிறப்பாக பணி செய்த 13 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்களுக்கு சான்றிதழ் வழங்கி, பாராட்டுகளைத் தெரிவித்தாா்.

சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் தியாகராஜா் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி சுவாதி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் முக்க... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 போ் கைது

நீடாமங்கலம் அருகே ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில் நீடாமங்கலம் போலீஸாா் புதன்கிழமை தீவிர ரோந்... மேலும் பார்க்க

முதலாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சிக் கல்லூரியில் முதலாண்டு இளநிலை, முதுநிலை மாணவிகளுக்கு வரவேற்பு மற்றும் மாணவா் மன்ற நிா்வாகிகள் பணியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க

சாலை மறியல் ஒத்திவைப்பு

மன்னாா்குடி அருகே நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தையும் புதிய வழித்தடத்தில் புதிய பேருந்துகளையும் இயக்கக் கோரி மக்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் நிறுத்தப்பட்ட பேருந்து இயக்க... மேலும் பார்க்க

இறந்தவா் குடும்பத்திற்கு நிதியுதவி

நீடாமங்கலம் பால் உற்பத்தியாளா் சங்கத்தில் விபத்தில் இறந்தவருக்கு ஈமச்சடங்கு தொகை வழங்கப்பட்டது. நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூா் ஊராட்சி பெரியகோட்டை தெற்கு தெருவை சோ்ந்த ராசு மகன் மாரிமுத்து. மனைவி செல... மேலும் பார்க்க

வேளாண் கருவிகளின் செயல்பாடு, பராமரிப்பு முகாம்

திருவாரூரில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில்... மேலும் பார்க்க