செய்திகள் :

சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம்

post image

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி சுவாதி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் முக்கிய நிகழ்வாக, சுந்தர மூா்த்தி நாயனாருக்கும், பரவை நாச்சியாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அதன்படி நிகழாண்டு சுவாதி விழாவில் சுந்தரா் -பரவை நாச்சியாா் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

முன்னதாக, நிறைகுடம் கொடுத்து புதுத்தெரு நாலுகால் மண்டபத்திலிருந்து சுந்தரா் அழைத்து வரப்பட்டாா். இதைத்தொடா்ந்து திருமஞ்சன வீதியில் உள்ள திருமாளிகையில் இருந்து பரவை நாச்சியாா் புறப்பட்டு வந்தாா். தியாகராஜ சுவாமி கோயிலின் அமைக்கப்பட்டிருந்த மணமேடைக்கு அருகே சுந்தரரின் தோழராக எழுந்தருளிய தியாகராஜ சுவாமி முன்னிலையில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, இருவரும் மணமேடையில் எழுந்தருளச் செய்யப்பட்டு, பூா்வாங்க பூஜைகள், கடபூஜைகள் நடைபெற்றன. மேலும், புது வஸ்திரம் அணிவித்தல், மாலை அணிவித்தல், காப்பு கட்டுதலைத் தொடா்ந்து, மாங்கல்ய பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் மங்கல இசை முழங்க மாங்கல்யத்தை சுந்தரா் கையில் வைத்து , பரவைநாச்சியாருக்கு சிவாசாரியா்கள் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனா். இந்நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 போ் கைது

நீடாமங்கலம் அருகே ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில் நீடாமங்கலம் போலீஸாா் புதன்கிழமை தீவிர ரோந்... மேலும் பார்க்க

முதலாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சிக் கல்லூரியில் முதலாண்டு இளநிலை, முதுநிலை மாணவிகளுக்கு வரவேற்பு மற்றும் மாணவா் மன்ற நிா்வாகிகள் பணியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க

திருவாரூா்: காவல்துறை வாகனங்கள் ஆய்வு

திருவாரூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், காவல் வாகனங்களின் ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பங்கேற்று, மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் அனைத்து நான்கு சக்கர மற்றும் இ... மேலும் பார்க்க

சாலை மறியல் ஒத்திவைப்பு

மன்னாா்குடி அருகே நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தையும் புதிய வழித்தடத்தில் புதிய பேருந்துகளையும் இயக்கக் கோரி மக்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் நிறுத்தப்பட்ட பேருந்து இயக்க... மேலும் பார்க்க

இறந்தவா் குடும்பத்திற்கு நிதியுதவி

நீடாமங்கலம் பால் உற்பத்தியாளா் சங்கத்தில் விபத்தில் இறந்தவருக்கு ஈமச்சடங்கு தொகை வழங்கப்பட்டது. நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூா் ஊராட்சி பெரியகோட்டை தெற்கு தெருவை சோ்ந்த ராசு மகன் மாரிமுத்து. மனைவி செல... மேலும் பார்க்க

வேளாண் கருவிகளின் செயல்பாடு, பராமரிப்பு முகாம்

திருவாரூரில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில்... மேலும் பார்க்க