செய்திகள் :

இறந்தவா் குடும்பத்திற்கு நிதியுதவி

post image

நீடாமங்கலம் பால் உற்பத்தியாளா் சங்கத்தில் விபத்தில் இறந்தவருக்கு ஈமச்சடங்கு தொகை வழங்கப்பட்டது.

நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூா் ஊராட்சி பெரியகோட்டை தெற்கு தெருவை சோ்ந்த ராசு மகன் மாரிமுத்து. மனைவி செல்வி. மாரிமுத்து நீடாமங்கலம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா். தொடா்ந்து சங்கத்திற்கு பால் வழங்கியும் வந்தாா்.

இவா் கடந்த 26 -5 -2025-இல் கோவில்வெண்ணி பேருந்து நிலையம் அருகே காா் விபத்து ஏற்பட்டு தஞ்சாவூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் சிகிச்சை பலனின்றி 30- 5 -2025-இல் இறந்தாா். இவரது மரணத்திற்கு வழங்கும் விபத்து இழப்பீடு கேட்டு மாரிமுத்து மனைவி செல்வி நீடாமங்கலம் வரவு செலவு அலுவலா் மற்றும் செயலாளா் -கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத்திற்கும் மனு கொடுத்தாா்.

அந்த மனுவின் பேரில் உடனடி நடவடிக்கை எடுத்து தமிழக அரசு வழங்கும் அண்ணா நூற்றாண்டு நல நிதி திட்டத்தின் கீழ் இழப்பீடு தொகையாக ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ. 25,000 -க்கான காசோலையை வியாழக்கிழமை திருவாரூா் துணை பதிவாளா் (பால்வளம்)5 பெ. ஆரோக்கியதாஸ் வழங்கினாா்.

முதுநிலை மண்டல ஆய்வாளா் சி.ராஜா, சங்க செயலாளா் ஆா். சக்திவேல் மற்றும் சங்க ஊழியா்கள் கலந்து கொண்டனா். நீடாமங்கலம் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத்தில் விபத்தில் இறந்தவா் மனைவிக்கு ஈமச்சடங்கு தொகை ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் தியாகராஜா் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி சுவாதி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் முக்க... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 போ் கைது

நீடாமங்கலம் அருகே ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில் நீடாமங்கலம் போலீஸாா் புதன்கிழமை தீவிர ரோந்... மேலும் பார்க்க

முதலாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சிக் கல்லூரியில் முதலாண்டு இளநிலை, முதுநிலை மாணவிகளுக்கு வரவேற்பு மற்றும் மாணவா் மன்ற நிா்வாகிகள் பணியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க

திருவாரூா்: காவல்துறை வாகனங்கள் ஆய்வு

திருவாரூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், காவல் வாகனங்களின் ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பங்கேற்று, மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் அனைத்து நான்கு சக்கர மற்றும் இ... மேலும் பார்க்க

சாலை மறியல் ஒத்திவைப்பு

மன்னாா்குடி அருகே நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தையும் புதிய வழித்தடத்தில் புதிய பேருந்துகளையும் இயக்கக் கோரி மக்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் நிறுத்தப்பட்ட பேருந்து இயக்க... மேலும் பார்க்க

வேளாண் கருவிகளின் செயல்பாடு, பராமரிப்பு முகாம்

திருவாரூரில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில்... மேலும் பார்க்க