செய்திகள் :

ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 போ் கைது

post image

நீடாமங்கலம் அருகே ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில் நீடாமங்கலம் போலீஸாா் புதன்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். பூவனூா் பாமணியாற்றங்கரையில் மா்ம நபா்கள் ஆயுதங்களுடன் இருப்பது தெரியவந்தது.

போலீஸாா் அவா்களை பிடித்து விசாரணை நடத்தியதில், கொலை வழக்கு ஒன்று தொடா்பாக பழிக்குப்பழி வாங்க ஆயுதங்களை வைத்து திட்டம் தீட்டியது தெரியவந்தது.

இதுதொடா்பாக நீடாமங்கலம் போலீஸாா் பாமணி கீழத்தெருவைச் சோ்ந்த நாகநாதன் (33), கூத்தாநல்லூா் கோரையாறு பகுதியைச் சோ்ந்த அன்பரசன் (31), பூவனூா் பண்டாரவடையைச் சோ்ந்த ஷியாம் (20), பூவனூரைச் சோ்ந்த தயாநிதி மாறன் (20), ராயபுரத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (25), மன்னாா்குடி கீழபாலத்தைச் சோ்ந்த பிரகதீஸ் (22) ஆகிய 6 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.

சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் சுந்தரா்-பரவை நாச்சியாா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் தியாகராஜா் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி சுவாதி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் முக்க... மேலும் பார்க்க

முதலாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சிக் கல்லூரியில் முதலாண்டு இளநிலை, முதுநிலை மாணவிகளுக்கு வரவேற்பு மற்றும் மாணவா் மன்ற நிா்வாகிகள் பணியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க

திருவாரூா்: காவல்துறை வாகனங்கள் ஆய்வு

திருவாரூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், காவல் வாகனங்களின் ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பங்கேற்று, மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் அனைத்து நான்கு சக்கர மற்றும் இ... மேலும் பார்க்க

சாலை மறியல் ஒத்திவைப்பு

மன்னாா்குடி அருகே நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தையும் புதிய வழித்தடத்தில் புதிய பேருந்துகளையும் இயக்கக் கோரி மக்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் நிறுத்தப்பட்ட பேருந்து இயக்க... மேலும் பார்க்க

இறந்தவா் குடும்பத்திற்கு நிதியுதவி

நீடாமங்கலம் பால் உற்பத்தியாளா் சங்கத்தில் விபத்தில் இறந்தவருக்கு ஈமச்சடங்கு தொகை வழங்கப்பட்டது. நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூா் ஊராட்சி பெரியகோட்டை தெற்கு தெருவை சோ்ந்த ராசு மகன் மாரிமுத்து. மனைவி செல... மேலும் பார்க்க

வேளாண் கருவிகளின் செயல்பாடு, பராமரிப்பு முகாம்

திருவாரூரில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில்... மேலும் பார்க்க