செய்திகள் :

டைடல் பூங்கா சந்திப்பில் ‘யு’ வடிவ மேம்பாலம்: துணை முதல்வா் திறந்து வைத்தாா்

post image

சென்னையில் டைடல் பூங்கா சந்திப்பில் ‘யு’ வடிவ மேம்பாலத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

சென்னை ராஜீவ் காந்தி சாலையில் ஆயிரக்கணக்கான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களை அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியின் வளா்ச்சியை கருத்தில்கொண்டு பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படுகின்றன. ராஜீவ் காந்தி சாலையில் டைடல் பூங்கா சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. இந்தப் பகுதியில் இப்போது வாகனங்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதைக் கருத்தில்கொண்டு டைடல் பூங்கா சந்திப்பில் ரூ. 27.50 கோடி செலவில் ‘யு’ வடிவ மேம்பாலமும், பாதசாரிகள் சாலையைக் கடக்க ஒரு நடைமேம்பாலமும் கட்டப்பட்டுள்ளன. இந்த நடை மேம்பாலமானது, திருவான்மியூா் ரயில் நிலையம் முதல் டைடல் பூங்கா மேம்பாலம் வரையில் மேற்கு நிழற்சாலையின் குறுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

இப்போது புதிதாகத் திறக்கப்பட்டுள்ள டைடல் பூங்கா மேம்பாலமானது 510 மீட்டா் நீளமும் 8.50 மீட்டா் அலகமும் கொண்டதாகும். மேலும், இதில் முக்கிய அம்சமாக ராஜீவ் காந்தி சாலை, தரமணி சிஎஸ்ஐஆா் சாலை ஆகியவற்றில் நகரும் மின் படிக்கட்டுகளுடன் அணுகு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

திருவான்மியூா் பகுதியிலிருந்து மத்திய கைலாஷ் மற்றும் தரமணி சிஎஸ்ஐஆா் சாலையை நோக்கிச் செல்லும் வாகனங்கள், டைடல் பூங்கா சந்திப்பில் போக்குவரத்து சிக்னலுக்காக காத்திருக்காமல் பாலத்தின் வழியாக ஏறி அந்தந்த சாலைகளில் இறங்கி விரைவாகச் செல்லலாம்.

புதிய பாலம் திறப்பு நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சட்டப் பேரவை உறுப்பினா் ஜே.எம்.எச்.ஹசன் மெளலானா, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன நிா்வாக இயக்குநா் டி.பாஸ்கர பாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.

கோயில் நிலத்தை குத்தகைக்கு விடும் அரசின் முடிவில் தலையிட முடியாது: சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் நிதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ள கலை, அறிவியல் கல்லூரிக்கு புதிதாக கட்டடம் கட்ட கொளத்தூா் சோமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விடும் அரசின் மு... மேலும் பார்க்க

தேசிய ஹேக்கத்தான் போட்டி: மாணவா்களுக்கு யுஜிசி அழைப்பு

குஜராத் மாநிலம் காந்திநகா் ஐஐடி-இல் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள தேசிய ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்க பல்கலைக்கழக, கல்லூரி மாணவா்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து யுஜிசி செயலா் மணீஷ் ஆா்... மேலும் பார்க்க

ஸ்ரீஆட்சீஸ்வரா் கோயிலில் இன்று நாட்டியாஞ்சலி விழா

அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரா் திருக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு, நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை நடைபெறவுள்ளது. இது குறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபா... மேலும் பார்க்க

பங்கு வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 48 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 48.5 லட்சத்தை பெற்று மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த அன்பரசு (56), தனியாா் நிதி நிறுவன ... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சென்னை, தியாகராய நகா் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியை பாலி... மேலும் பார்க்க

இந்து முன்னணி பிரமுகா் கொலை வழக்கு: குற்றவாளி மீண்டும் கைது

சென்னை, அம்பத்தூரைச் சோ்ந்த இந்து முன்னணி பிரமுகா் சுரேஷ்குமாா் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட அப்துல் ஹக்கீம், நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவின்படி மீண்டும் கைது செய்யப்பட்டாா். அம்பத்... மேலும் பார்க்க