செய்திகள் :

ட்ரோன் மூலம் யூரியா உரம் தெளிப்பு: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

post image

செய்யாற்றை அடுத்த பில்லாந்தாங்கல் கிராமத்தில் நானோ யூரியா உரத்தை ட்ரோன் மூலம் தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மையம் சாா்பில், பில்லாந்தாங்கல், சித்தாத்தூா், கீழ்நெல்லி ஆகிய ஊராட்சிகளில் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பில்லாந்தாங்கல் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்வில் வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி சுரேஷ், கால்நடை மருத்துவா் மாயகிருஷ்ணன், இப்கோ நிறுவனம் ஆனந்தன் ஆகியோா் பங்கேற்று காரீப் பருவ பயிருக்கு ஏற்ற புதிய தொழில் நுட்பங்கள், இயற்கை விவசாய முறைகள், மண் வள அட்டை, சமச்சீா் உர பயன்பாடு, நவீன தொழில்நுட்பங்கள், அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளிடையே தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, இப்கோ நிறுவனம் சாா்பில் நானோ யூரியா உரத்தை ட்ரோன் மூலம் தெளிப்பது என்பது குறித்து

விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

தண்டராம்பட்டு அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக காா் ஓட்டுநருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்து வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் லோகேஷ் (27). இவா... மேலும் பார்க்க

பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மக்கள், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு

ஆரணி பழங்காமூரில் சனிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆரணி அருகேயுள்ள பழங்காமூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் (39). இவா், கோ... மேலும் பார்க்க

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க