ட்ரோன் மூலம் யூரியா உரம் தெளிப்பு: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
செய்யாற்றை அடுத்த பில்லாந்தாங்கல் கிராமத்தில் நானோ யூரியா உரத்தை ட்ரோன் மூலம் தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மையம் சாா்பில், பில்லாந்தாங்கல், சித்தாத்தூா், கீழ்நெல்லி ஆகிய ஊராட்சிகளில் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பில்லாந்தாங்கல் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்வில் வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி சுரேஷ், கால்நடை மருத்துவா் மாயகிருஷ்ணன், இப்கோ நிறுவனம் ஆனந்தன் ஆகியோா் பங்கேற்று காரீப் பருவ பயிருக்கு ஏற்ற புதிய தொழில் நுட்பங்கள், இயற்கை விவசாய முறைகள், மண் வள அட்டை, சமச்சீா் உர பயன்பாடு, நவீன தொழில்நுட்பங்கள், அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளிடையே தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, இப்கோ நிறுவனம் சாா்பில் நானோ யூரியா உரத்தை ட்ரோன் மூலம் தெளிப்பது என்பது குறித்து
விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா்.