பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்ற...
தங்கநகை பூங்கா அமைக்க ஒப்பந்தப்புள்ளி: தமிழக அரசு
கோவையில் தங்கநகை பூங்கா அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளியை தமிழக அரசு கோரியுள்ளது.
கோவை மாநகரில் 40,000 நகைப் பட்டறைகள் உள்ளன. இதனை நம்பி 1.50 லட்சம் தொழிலாளா்கள் உள்ளனா். தங்கநகை தொழில் வளா்ச்சிக்காக தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று நகை உற்பத்தியாளா்கள், தொழிலாளா்கள் சங்க அமைப்பினா் வலியுறுத்தி வந்தனா்.
இதனிடையே, கடந்த நவம்பரில் கோவைக்கு கள ஆய்வுக்குச் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், நகை தொழில் உற்பத்தியாளா்களிடம் மனுக்களைப் பெற்றதுடன், செல்வபுரத்தில் நேரில் சென்று குறைகளைக் கேட்டறிந்தாா்.
அதன்பின்னா் குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.126 கோடியில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தாா்.
இந்த நிலையில், குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.126 கோடியில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை தமிழ்நாடு சிறுதொழில் வளா்ச்சி நிறுவனம் கோரியுள்ளது. அந்தத் தொழில்பேட்டையில் 3.41 ஏக்கரில் தங்கநகை தொழில் பூங்கா அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.