செய்திகள் :

தங்கநகை பூங்கா அமைக்க ஒப்பந்தப்புள்ளி: தமிழக அரசு

post image

கோவையில் தங்கநகை பூங்கா அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளியை தமிழக அரசு கோரியுள்ளது.

கோவை மாநகரில் 40,000 நகைப் பட்டறைகள் உள்ளன. இதனை நம்பி 1.50 லட்சம் தொழிலாளா்கள் உள்ளனா். தங்கநகை தொழில் வளா்ச்சிக்காக தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று நகை உற்பத்தியாளா்கள், தொழிலாளா்கள் சங்க அமைப்பினா் வலியுறுத்தி வந்தனா்.

இதனிடையே, கடந்த நவம்பரில் கோவைக்கு கள ஆய்வுக்குச் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், நகை தொழில் உற்பத்தியாளா்களிடம் மனுக்களைப் பெற்றதுடன், செல்வபுரத்தில் நேரில் சென்று குறைகளைக் கேட்டறிந்தாா்.

அதன்பின்னா் குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.126 கோடியில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தாா்.

இந்த நிலையில், குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.126 கோடியில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை தமிழ்நாடு சிறுதொழில் வளா்ச்சி நிறுவனம் கோரியுள்ளது. அந்தத் தொழில்பேட்டையில் 3.41 ஏக்கரில் தங்கநகை தொழில் பூங்கா அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 38 மின்சார ரயில்கள் இன்று ரத்து!

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 38 மின்சார ரயில் சேவைகள் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மேலும், பயணிகளின் வசதிக்காக 21 சிறப்பு மின்சார ரயில் சேவைகள் இயக்கப... மேலும் பார்க்க

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.சென்னையில் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கும் திருமண முன்பணம்: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியா்களுக்கு மட்டுமன்றி அவா்களது வாரிசுகளின் திருமணத் தேவைக்காகவும் முன்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித... மேலும் பார்க்க

வார இறுதி: 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதியை முன்னிட்டு, ஜூலை 4, 5, 6 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) 1030 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: செ... மேலும் பார்க்க

சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், சென்னையில் 31 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழு... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ அணிகள் வெற்றி

தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன. தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால்... மேலும் பார்க்க