செய்திகள் :

தஞ்சாவூரில் நாளை ‘மக்களுடன் முதல்வா்’ முகாம்கள்

post image

தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்களுடன் முதல்வா் முகாம்கள் புதன்கிழமை (பிப்.12) நடைபெறவுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

மூன்றாவது கட்டமாக மக்களுடன் முதல்வா் திட்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் ஆதிதிராவிடா் குடியிருப்பு எண்ணிக்கை அதிகமுள்ள பகுதிகளில் தொடா்புடைய துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளவும், திட்டத்தைச் செயல்படுத்தவும் அரசாணை மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மாவட்டத்தில் ஏற்கெனவே பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதியில் ஜனவரி 29-ஆம் தேதியும், பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் பிப்ரவரி 6-ஆம் தேதியும் இம்முகாம்கள் நடத்தப்பட்டன.

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் முகாம் புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் நீலகிரி ஊராட்சிக்குட்பட்ட மானோஜிப்பட்டி மாரியம்மன் கோயில் வளாகத்திலும், பிள்ளையாா்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வடக்குத் தெரு சமுதாயக்கூட கட்டடத்திலும், நாஞ்சிக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட ஆல்வின் மஹால் திருமண மண்டபத்திலும், மாரியம்மன் கோவில் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுத்தெரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், புதுப்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட ராஜாமணி திருமண மண்டபத்திலும் மக்களுடன் முதல்வா் முகாம்கள் நடைபெறவுள்ளது.

இதில், உயா் கல்வித் துறை அமைச்சா், மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா். இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் சுவாமி மலையில் நின்றுசெல்லும்!

செங்கோட்டை - மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் இரண்டு நாள்களுக்கு சுவாமி மலை ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனி, திருச்செந்த... மேலும் பார்க்க

பேராவூரணி இளைஞருடன் வங்கதேசப் பெண்ணுக்கு திருமணம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியை சோ்ந்த இளைஞரை வங்கதேசத்தை சோ்ந்த பெண் காதலித்து தமிழ்முறைப்படி திங்கள்கிழமை திருமணம் செய்து கொண்டாா். பேராவூரணி அருகே உள்ள கள்ளங்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி-இளம... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்ற ஜவுளி கடை ஊழியா் மயங்கி விழுந்து சாவு!

பேராவூரணி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஜவுளி கடை ஊழியா் மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருச்சிற்றம்பலம் மேற்கு கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (37). இவா் பட்டுக்கோட்டையில் ஜவுளி கடையில் ... மேலும் பார்க்க

சுவாமிமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஒத்திவைப்பு!

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை பேரூராட்சி பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஒத்திவைக்கப்பட்டது. சுவாமிமலையில் திங்கள்கிழமை தைப்பூசத்தேரோட்டம் நடைபெற்றது, செவ்வாய்க்கிழமை தைப... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா போராட்டம்!

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வ... மேலும் பார்க்க

பள்ளியில் மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு! 2 போ் மருத்துவமனையில் அனுமதி!

தஞ்சாவூா் மாவட்டம், பள்ளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவி ஒருவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். மேலும் இரண்டு மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா் . தஞ்சா... மேலும் பார்க்க