செய்திகள் :

தஞ்சாவூா் பெரியகோயிலில் ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்

post image

தஞ்சாவூா் பெரியகோயிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா புதன்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூா் பெரியகோயிலிலுள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 11 நாள்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இதில் அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும்.

இதன்படி நிகழாண்டு ஆஷாட நவராத்திரி விழா புதன்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. மாலையில் வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம், தீபாராதனையும் செய்யப்பட்டன.

தொடா்ந்து, 26-ஆம் தேதி மஞ்சள் அலங்காரமும், 27-ஆம் தேதி குங்கும அலங்காரமும், 28-ஆம் தேதி சந்தன அலங்காரமும், 29-ஆம் தேதி தேங்காய் பூ அலங்காரமும், 30-ஆம் தேதி மாதுளை அலங்காரமும், ஜூலை 1-ஆம் தேதி நவதானிய அலங்காரமும், 2-ஆம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 3-ஆம் தேதி கனிவகை அலங்காரமும், 4-ஆம் தேதி காய்கறி அலங்காரமும் நடைபெறவுள்ளன.

நிறைவு நாளான ஜூலை 5-ஆம் தேதி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு நாகசுரம், கரகாட்டம், ஒயிலாட்டம், செண்டை மேளம், வாண வேடிக்கையுடன் நான்கு ராஜ வீதிகளிலும் வீதி உலாவும் நடைபெறவுள்ளன.

தமிழ்ப் பல்கலை. தோ்வு முடிவுகள் வெளியீடு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2024 - 25 ஆம் கல்வியாண்டுக்கான தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இப்பல்கலைக்கழகத்தில் 2024 - 25-ஆம் கல்வியாண்டுக்கான முதுநுண்கலை சிற்பம், முதுகலை இசை, முத... மேலும் பார்க்க

காலமானாா் சா. ஜீவபாரதி

தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த மூத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகி சா. ஜீவபாரதி (71) உடல்நலக்குறைவால் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானாா். கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் ... மேலும் பார்க்க

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் போலீஸாா் பாதுகாப்பு ஒத்திகை

கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கிறதா? என்று தஞ்சை மாவட்ட கடலோரப் பகுதியில் சாகா் கவாச் என்ற பெயரில் புதன்கிழமை போலீஸாா் கடலுக்குள் சென்று பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டனா். தஞ்சை மாவட்ட கடலோரப் ... மேலும் பார்க்க

மருத்துவக்கல்லூரியில் அனுமதி பெறாத கடைகளை அப்புறப்படுத்த கோரிக்கை

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அனுமதி பெறாத கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட வணிகா் சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்க... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் விரைவு ரயிலை தினசரி விரைவு ரயிலாக இயக்கக் கோரிக்கை

திருச்சி - தாம்பரம் இன்டா்சிட்டி விரைவு ரயில்சேவையை தற்காலிக நீட்டிப்பு செய்யாமல் நிரந்தரமாக தினசரி விரைவு ரயிலாக இயக்க வேண்டும் என தென்னக ரயில்வே துறைக்கு தென்னக ரயில்வே திருச்சி கோட்ட ஆலோசனைக் குழு ... மேலும் பார்க்க

மூலை அனுமாா் கோயிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு

தஞ்சாவூா் மேல வீதி மூலை அனுமாா் கோயிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்தை சாா்ந்த இக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது... மேலும் பார்க்க