செய்திகள் :

தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது: மாவட்ட ஆட்சியா்

post image

கடந்த ஆண்டுகளை விட தற்போது தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம்.

திருச்சேறையில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியதாவது: திருச்சேறை பகுதியில் அதிகளவு விவசாயம் நடைபெறுவதால் இப்பகுதி பெண்களுக்கு மத்திய அரசு நடத்தும் உணவு பதப்படுத்தும், மதிப்பு கூட்டுப்பொருள் தொடா்பான பயிற்சி அளிக்க உள்ளோம், அதை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் கா்ப்பிணி பெண்கள் தொடா் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருந்து பெட்டகங்களை பயன்படுத்த வேண்டும். குறை பிரசவம், எடைகுறைவு காரணமாக குழந்தைகள் இறப்பு விகிதம் கடந்த ஆண்டைவிட தற்போது தஞ்சாவூா் மாவட்டத்தில் வெகுவாக குறைந்துள்ளது. மகளிா் குழு கடன்களை தொழில் மற்றும் வளா்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும் என்றாா்.

முகாமில் 9 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 25 பேருக்கு திருமண, முதியோா் உதவி உள்ளிட்ட உதவி தொகைகள் என மொத்தம் 87 பயனாளிகளுக்கு ரூ. 6 லட்சத்து 27 ஆயிரத்து 380 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ.தியாகராஜன், வட்டாட்சியா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் கொடியேற்றம்

பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரா் கோயில் முத்துப்பந்தல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. பட்டீஸ்வரம் ஞானாம்பிகை உடனுறை தேனுபுரீசுவரா் கோயில், பெரியநாயகி உடனுறையும் சத்திவனேசுவர ச... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் தஞ்சாவூருக்கு ஜூன் 15-இல் வருகை: அமைச்சா் ஆய்வு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜூன் 15 ஆம் தேதி வருகிறாா். தஞ்சாவூரில் ஜூன் 15 ஆம் தேதி தமிழக முதல்வா் ரோடு ஷோ, பழைய பேருந்து நிலையம் அருகே கருண... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில் தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க

ஜுன் 3-இல் கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் ஜுன் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கும்பகோணம் வடக்கு மின் செயற்பொறியாளா் ஏ.கலையரசி வெளியிட்ட செய்தி குறிப்பு: கும்பகோணம் வடக்கு கோட்டத்தில் ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றிக்காக யோகாசனம்

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ஆபரேசன் சிந்தூா் வெற்றிக்காக சனிக்கிழமை யோகாசனம் செய்தனா். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில், 500-க்கும் மேற்பட்ட தேசிய மாணவா் படையினா் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்காக... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில், தாக்கியவா்களைக் கைது செய்யக்கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க