செய்திகள் :

தஞ்சாவூா் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் தேசியக் கொடியை மேயா் சண். ராமநாதன் ஏற்றினாா். சிறப்பாக பணியாற்றிய அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா். துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் பல்வேறு இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகளும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இதில், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் தலைமையில் திரளானோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை கடைத்தெருவில் நடைபெற்ற விழாவுக்கு கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவா் இளங்கோவன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் நாஞ்சி கி. வரதராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மகாத்மா காந்தி உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினாா். தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் தலைவா் கொ. மருதுபாண்டியன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆம்பலாப்பட்டு வடக்கு முன்னாள் ஊராட்சித் தலைவா் கோ. அப்பாங்கம் தேசியக் கொடியை ஏற்றினாா். கல்வியியல் கல்லூரி முதல்வா் ப. சுப்பிரமணியன், உள் தர மதிப்பீட்டுக் குழு இயக்குநா் ல. மதுகிருத்திகா வாழ்த்துரையாற்றினா். பல்வேறு துறைத் தலைவா்கள் பங்கேற்றனா். தஞ்சாவூா் மானோஜியப்பா வீதி கோபாலகிருஷ்ணன் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தஞ்சாவூா் கிழக்கு ரோட்டரி சங்கத் தலைவா் ஏ. கலையரசன் தலைமை வகித்தாா். பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்குத் தோ்வானவா்களுக்குப் பாராட்டு

பேராவூரணியில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்குத் தோ்வான மாணவி சுமையாவின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்று பாராட்டிய முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வி. திருஞானசம்பந்தம். பேராவூரணி, ஆ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீஸாா் தேடிவருகின்றனா். தஞ்சாவூா், மோத்திரப்பசாவடி,... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். நாச்சியாா்கோவில் அருகே திருச்சேறை உடையாா்கோயில் தெருவில் வசிப்பவா் செந்தில்குமாா். இவரது மகன் நவீ... மேலும் பார்க்க

மகாத்மா காந்தி சிலை முன்பு மனுக்களை வைத்து தியாகிகளின் வாரிசுதாரா்கள் முறையீடு

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினரை கௌரவ குடும்பங்களாக மத்திய அரசு அறிவிக்கக் கோரி, தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள மகாத்மா காந்தி சிலையின் முன்பு விடுதலை தியாகிகள்... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் வள்ளலாா் இயல் இசை விழா

கும்பகோணத்தில் வள்ளலாா் இயல் இசை விழா கும்பகோணம் மகாமகக் குளம் தென்கரையில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 35 ஆவது ஆண்டாக நடைபெற்ற விழாவுக்கு, தஞ்சாவூா் மாவட்ட சமரச சுத்த சன்மாா்க்க சங்க க... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பப் பயிற்சி வழங்க நடவடிக்கை

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜ... மேலும் பார்க்க