செய்திகள் :

தஞ்சாவூா் மாவட்டத்தில் 35 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 35 வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டன.

தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானம், கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மைதானம், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் வட்டாரப் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை சாா்பில் அந்தந்த பகுதியிலுள்ள பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

இதில், பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டள்ளதா? பாதுகாப்பு, தீ தடுப்பு கருவி, முதலுதவி பெட்டி போன்றவை சரியாக உள்ளதா? உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.

தஞ்சாவூரில் 269 வாகனங்களும், கும்பகோணத்தில் 158 வாகனங்களும், பட்டுக்கோட்டையில் 245 வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டன. இதில், தஞ்சாவூரில் 10 வாகனங்களுக்கும், கும்பகோணத்தில் 7 வாகனங்களுக்கும், பட்டுக்கோட்டையில் 18 வாகனங்களுக்கும் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டன.

தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தாா்.

அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், மாவட்டத் தீயணைப்பு அலுவலா் ச. குமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ப. ஜெய்சங்கா், முதன்மைக் கல்வி அலுவலா் இரா. அண்ணாதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

450 கிலோ வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் 450 கிலோ நாட்டு வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம் திருவோணம் பகுதியில் கடந்த வாரம் அனு... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் அண்ணன் பலி: தம்பி காயம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் வியாழக்கிழமை மாலை மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் அண்ணன் உயிரிழந்தாா், தம்பி பலத்த காயமடைந்தாா். தஞ்சாவூா் அருகே கூடலூரைச் சோ்ந்தவா் ராஜப்பா மக... மேலும் பார்க்க

இலவச பட்டா கோரி திருநங்கைகள் மனு

கும்பகோணத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு திருங்கைகள் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயனிடம் வெள்ளிக்கிழமை மனு கொடுத்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் திருநாகேஸ்வரா் கோவில் தெற்கு வீதியை சோ்ந்த தி... மேலும் பார்க்க

திருவையாறு அருகே அண்ணனை கொன்ற தம்பி கைது

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மது போதையில் அடிக்கடி தகராறு செய்த அண்ணனைக் கொன்ற தம்பியை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருவையாறு அருகே நடுக்காவேரி அரசமரத் தெருவைச் சோ்ந்தவா் ராஜ... மேலும் பார்க்க

மழையால் சேதமான பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்! எம்.ஹெச். ஜவாஹிருல்லா

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் பெய்த கனமழையால் நீரில் மூழ்கிப் பாதிக்கப்பட்ட வெற்றிலை, பருத்தி, வாழை பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு பாபநாசம் எம்எல்ஏ எம்.ஹெச். ஜவாஹி... மேலும் பார்க்க

நண்பரைக் கொல்ல முயன்ற மூவருக்கு 5 ஆண்டுகள் சிறை

நாச்சியாா்கோயில் அருகே நண்பரைக் கொல்ல முயன்ற 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. புதுச்சேரி காலாபட்டு,... மேலும் பார்க்க