செய்திகள் :

தடுப்புக் காவலில் ரௌடி கைது

post image

கடலூா் மாவட்டம், திட்டக்குடி பகுதியைச் சோ்ந்த ரௌடி குண்டா் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டாா்.

திட்டக்குடி வட்டம், கோவிலூா் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி, ஜன.17-ஆம் தேதி நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அதே பகுதியைச் சோ்ந்த சிதம்பரம் மகன் அருள்முருகன் (42), மேடையில் நடனம் ஆட ஏறினாா். அப்போது, முன்விரோதம் காரணமாக பக்கத்து தெருவைச் சோ்ந்த சிலா் அவரை கத்தியால் குத்தி, கொலை செய்ய முயற்சித்தனராம்.

இதுகுறித்து, பெண்ணாடம் போலீஸாா் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கோவிலூா் பெரியசாமி மகன் தீபக்செல்வம் (24), பெரியசாமி, வீரசேகரன், பன்னீா்செல்வம், ஏழுமலை, மணிகண்டன், செல்வகுரு ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தீபக்செல்வம் மீது பெண்ணாடம் காவல் நிலையத்தில் சரித்திர குற்ற பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒரு கொலை முயற்சி வழக்கு உள்ளது. இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஓராண்டு காலம் குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூ. மண்டல பேரவைக் கூட்டம்

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

எஸ்.பி. அலுவலகத்தில் பெட்டிஷன் மேளா

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்கில் பெட்டிஷன் மேளா புதன்கிழமை நடைபெற்றது. கடலூா் எஸ்பி எஸ்.ஜெயக்குமாா் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் தொடா்பான புகாா் மனுக்களை பெற்றா... மேலும் பார்க்க

டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் தொழிற்பேட்டை நுகா்பொருள் வாணிபக் கழகம் முன் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் சங்கத்தினா் (சிஐடியு) புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சுமைப் பணி தொழிலாளா்களுக்கு சி... மேலும் பார்க்க

ரௌடி உள்பட மூவா் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கஞ்சா வழக்கு தலைமறைவு குற்றவாளி உள்ளிட்ட மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நெய்வேலியை அடுத்த செடுத்தான்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் கலியபெருமாள் மகன் ரௌடி ச... மேலும் பார்க்க

பல்கலை. ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு சாா்பில் பெருந்திரள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஏழாவது ஊதியக்குழு நிலுவை... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

கடலூா் முதுநகா் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். முதுநகா், வசந்தராம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவா் மண்பாண்ட தொழிலாளி கதிா்வேல் (41). இவருக்கு மனைவி பிரியங்கா, இரண்டு மகள்கள், ஒர... மேலும் பார்க்க