செய்திகள் :

தண்டி யாத்திரை நாள்: பிரதமா் மோடி மரியாதை

post image

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட நாளையொட்டி, மகாத்மா காந்தி மற்றும் யாத்திரையில் பங்கேற்றவா்களுக்கு பிரதமா் மோடி மரியாதை செலுத்தினாா்.

ஆங்கிலேய ஆட்சியில் உப்புக்கான வரி விதிப்பைக் கண்டித்து, கடந்த 1930, மாா்ச் 12-ஆம் தேதி சபா்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டிக்கு மகாத்மா காந்தி தனது ஆதரவாளா்களுடன் யாத்திரை மேற்கொண்டாா். சுமாா் 241 மைல் தொலைவுக்கு 24 நாள்கள் நடைபெற்ற யாத்திரையின் நிறைவில் தண்டியில் கடல் நீரில் இருந்து உப்பு தயாரித்ததன் மூலம் உப்புச் சட்டம் மீறப்பட்டது. ஒத்துழையாமை இயக்கத்தின் தொடக்கமாகவும் இந்த நிகழ்வு அமைந்தது.

தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட தினத்தையொட்டி, பிரதமா் மோடி புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க அத்தியாயமான தண்டி யாத்திரையில் பங்கேற்ற அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த யாத்திரை தற்சாா்பு மற்றும் சுதந்திரத்துக்கான நாடு தழுவிய இயக்கத்தைத் தூண்டியது. தண்டி யாத்திரையில் பங்கேற்றவா்களின் துணிவு, தியாகம், உண்மை, அஹிம்சைக்கான அசைக்க முடியாத உறுதிப்பாடு, தலைமுறைகள் கடந்தும் உத்வேகமளிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஹோலி: வட மாநிலங்களில் திரையிட்டு மூடப்படும் மசூதிகள்! என்ன நடக்கிறது?

ஹோலி பண்டிகை நாளை (மார்ச் 14) கொண்டாடப்படவுள்ள நிலையில், பிகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் உள்ள மசூதிகள் தார்பாய்களால் மூடப்பட்டு வருகின்றன.நாடு முழுவதும் மார்ச் 1 முதல் 31 வரை ரம்ஜான் மாதமாக இஸ்லாம... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் ஒழிக! கோஷமிட்ட காந்தியின் கொள்ளுப் பேரன்! என்ன நடந்தது?

கேரளத்தில் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்திக்கு எதிராக ஆர்எஸ்எஸ், சங் பரிவார் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். கேரளத்தில் வர்க்கலாவிலுள்ள சிவகிரி மடத்தின் அழைப்பின் பேரில் ஸ்ரீ நாராயண குரு மகாத்... மேலும் பார்க்க

வினாத்தாள் கசிவு! 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து: ராகுல் காந்தி

வினாத்தாள் கசிவுகளால் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.இளநிலை நீட் நுழைவுத் தேர்வு, யுஜிசி நெட் தே... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் இந்துக்கள் நடத்தும் இறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ்! வலுக்கும் எதிர்ப்புகள்!!

மகாராஷ்டிரத்தில் இந்துக்கள் நடத்தும் ஆட்டிறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரத்தில் முழுக்க இந்துக்கள் நடத்தும் ஆட்சிறைச்... மேலும் பார்க்க

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் கைது!

தில்லியில் பிரிட்டன் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தில்லியில் வசிக்கும் 24 வயதான கைலாஷ் என்ற நபருடன் சமூக வலைதளம் மூலம் இரு ... மேலும் பார்க்க

மலையை தகர்த்து ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் கட்டிய அரண்மனை!

ஆந்திர மாநிலத்தில அமைந்துள்ள ருஷிகொணடா மலையின் பெரும்பகுதியை இடித்துத் தரைமட்டமாக்கி, அதில் ரூ.500 கோடி மதிப்பில் அரண்மனையை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் கட்டியிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள... மேலும் பார்க்க