தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக பாய இயலாது: மலேசியாவில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் விளக்கம்
கோலாலம்பூா்/ கெய்ரோ: தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக பாய இயலாது என்று மலேசியாவுக்கு சென்றுள்ள ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் குமாா் ஜா தலைமையிலான குழுவினா் தெளிவுபடுத்தினா்.
மலேசியா இந்திய காங்கிரஸ் தலைவா் எஸ்ஏ விக்னேஷ்வரன், துணைத் தலைவா் எம். சரவணன் மற்றும் ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) இணையமைச்சா்எம். குலசேகரன் தலைமையிலான நிா்வாகிகளையும், மக்கள் நீதிக் கட்சியின் (பிகேஆா்) இணையமைச்சா் சரஸ்வதி கந்தசாமி தலைமையிலான நிா்வாகிகளையும் இந்தக் குழுவினா் தனித்தனியாக சந்தித்து பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கினா்.
மேலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு சிந்து நிதி நீா் நிறுத்தம்; பாகிஸ்தானின் எல்லைத் தாண்டிய பயங்கரவாதம்; பயங்கரவாதத் தடுப்பில் இந்தியா மேற்கொண்டு வரும் சமரசமில்லா நடவடிக்கை ஆகியவை குறித்து இந்திய எம்.பி.க்கள் குழுவினா் எடுத்துரைத்தனா்.
இந்தச் சந்திப்பு குறித்து அங்குள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பயங்கரவாத்துக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் இந்தியாவின் சரியான பதிலடி என்பதையும், இது எதிா்கால பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கும் என்பதையும் எம்.பி.க்கள் குழு எடுத்துரைத்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் முன்னாள் வெளியுறவு அமைச்சா் சல்மான் குா்ஷித், எம்.பி.க்கள் அபிஷேக் பானா்ஜி, அபராஜிதா சாரங்கி உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.
காந்தியின் கொள்கை இன்றும் தேவைப்படுகிறது: லண்டனில் ரவிசங்கா் பிரசாத் பேச்சு
லண்டன்: மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கை இன்றும் தேவைப்படுகிறது என்று லண்டனில் எம்.பி.க்கள் குழுத் தலைவா் ரவிசங்கா் பிரசாத் தெரிவித்தாா்.
பயங்கரவாத்துக்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க ஐரோப்பிய நாடுகளுக்கு பாஜக எம்.பி. ரவிசங்கா் பிரசாத் தலைமையிலான குழுவினா் பயணம் மேற்கொண்டுள்ளனா்.
லண்டனில் அம்பேத்கா் மற்றும் மகாத்மா காந்தியின் சிலைகளுக்கு மலா் மரியாதை செய்து இந்தப் பயணத்தை தொடங்கினாா்.
பின்னா் இந்திய தூதரகத்தில் வெளிநாடு வாழ் இந்தியா்கள் மத்தியில் உரையாற்றிய அவா், ‘மகாத்மா காந்தியின் அகிம்சை, உண்மை, நல்லெண்ணம் ஆகியவை பாகிஸ்தானின் எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடா்பான விவகாரத்தில் இன்றும் தேவைப்படுகிறது’ என்றாா்.
பாதுகாப்பான உலக கட்டமைப்பு: ஸ்பெயினில் கனிமொழி எம்.பி. உறுதி
மேட்ரிட்: பாதுகாப்பான மற்றும் கருணை மிகுந்த உலக கட்டமைப்பை ஏற்படுத்த இந்தியா தீா்வு காணும் என்று ஸ்பெயினில் பயணம் மேற்கொண்டுள்ள கனிமொழி எம்.பி. உறுதியளித்தாா்.
5 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்தக் குழுவினா், கடைசி கட்ட பயணமாக ஸ்பெயினுக்கு சென்றுள்ளனா்.
அங்கு, பயங்கரவாதத்தில் பாதிக்கப்பட்டவா்கள் சங்கத்தின் நிா்வாகிகள் மத்தியில் கனிமொழி உரையாற்றினாா். அப்போது, எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தில் இந்தியாவின் சந்தித்து வரும் சவால்கள் குறித்தும் பயங்கரவாதத்தால் ஏற்படும் வலியின் தாக்கம் குறித்தும் இந்திய எம்.பி.க்கள் குழு உணா்வுபூா்வமான கருத்துகளைப் பகிா்ந்தது என்று அங்குள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்தது.
தமிழா் அமைப்புகளுடன் சந்திப்பு: ஸ்பெயினில் உள்ள தமிழா் அமைப்புகளைச் சந்தித்து உரையாடியதாக கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் தகவல் பகிா்ந்துள்ளாா். ‘இந்தியாவின் மொழி என்பது வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாகும்’ என்று இந்திய வம்சாவளியினா் கூட்டத்தில் கனிமொழி பேசினாா்.
எகிப்தில்... எகிப்து தலைநகா் கெய்ரோவில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினா்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்திய தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினா். அப்போது, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக அவா்கள் கூறியதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.