செய்திகள் :

தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற மகன்!

post image

ஒடிசாவில் தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற மகனை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சந்துவா கிராமத்தில் வசிப்பவர் சம்பூ சிங் (40). இவரது தந்தை பைதர் சிங் (70).

இவர் மது அருந்துவதற்கு பணம் கேட்டு தினமும் தனது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு தாமதமாக வீட்டிற்குத் திரும்பிய சம்பூ மீண்டும் தனது தாய், தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

அவர்கள் பணம் தர மறுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த சம்பூ அங்கிருந்த கோடாரியால் தனது தந்தையின் தலையை துண்டித்தார். தடுக்கவந்த அவரது தாயையும் கீழே தள்ளிவிட்டார்.

பின்னர் அவரது தந்தையின் தலையை ஒரு சாக்குப்பையில் கட்டிய சம்பூ காவல் நிலையத்தில் சரணடைவதற்காக அந்தத் தலையுடன் நடந்து சென்றார். இந்தத் தகவலை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவரைக் கைது செய்தனர்.

இதையும் படிக்க | மூடநம்பிக்கை: பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த கொடூரம்!

கொலை செய்தபோது சம்பூ குடிபோதையில் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பூவின் தாய் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார்.

தலை மற்றும் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்திய அணி ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால், நாடு முழுவதிலும் உள்ள இந்திய அணி ரசிகர்கள் பட்டாசு வெடித்து கோலகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்... மேலும் பார்க்க

இரு ஆண்டுகளில் 286 சிங்கங்கள், 456 சிறுத்தைகள் பலி!

குஜராத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 286 சிங்கங்கள், 456 சிறுத்தைகள் பலியானதாக அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷைலேஷ் ... மேலும் பார்க்க

நாட்டின் உற்பத்தி கொள்முதல் 14 மாதங்களில் இல்லாத அளவு சரிவு!

நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் கடந்த மாதத்தில் 56.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஜனவரி மாதத்தில் 57.7 சதவீதமாக இருந்தது. 2023 டிசம்பர் முதல் நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் குறைந்துவரும் நிலையில், த... மேலும் பார்க்க

திருப்பதி தேவஸ்தான அறைகள் பெற புதிய விதி: தரிசன டிக்கெட் இருந்தால்தான்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தங்கும் அறைகள் ஒதுக்கீட்டில் புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி ஏழும... மேலும் பார்க்க

மூடநம்பிக்கை: பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த கொடூரம்!

ஒடிசா மாநிலத்தின் நபரங்பூரில் பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தின் ஹண்டல்படா கிராமத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

ஆறு ஆண்டுகளாக நிரப்பப்படாத மக்களவைத் துணைத் தலைவர் பதவி!

18-ஆவது மக்களவை தொடங்கி 9 மாதங்கள் ஆகியும், இதுவரை அவையின் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.17-ஆவது மக்களவை முழுவதும் துணைத் தலைவர் பதவி நிரப்பப்... மேலும் பார்க்க