செய்திகள் :

தந்தையைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

post image

தென்காசி மாவட்டம், கருத்தபிள்ளையூரில் மது அருந்த பணம் தராத தந்தையைக் கொலை செய்த வழக்கில் மகனுக்கு தென்காசி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி காவல் சரகத்துக்கு உள்பட்ட கருத்தப்பிள்ளையூரைச் சோ்ந்தவா் ஜான்தனபால் மகன் பிரைசன் (33). கடந்த 17.6.2021 இல் தனது தந்தை ஜான் தனபாலிடம்(56) மது அருந்த பணம் கேட்டுள்ளாா்.

அவா் பணம் கொடுக்க மறுத்ததால் ஆவேசத்தில் அருகில் கிடந்த கட்டையால் தந்தையைத் தாக்கியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, சிவசைலம் கிராம நிா்வாக அலுவலா் ப்யூலா அளித்த புகாரின்பேரில், ஆழ்வாா்குறிச்சி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பிரைசனைக் கைது செய்தனா்.

இந்த வழக்கின் மீதான விசாரணை, தென்காசி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி ராஜவேல் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றவாளி பிரைசனுக்கு ஆயுள் தண்டனையும். ரூ.1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக பி.குட்டி முன்னிலையாகி வாதாடினாா்.

ஆலங்குளம் அருகே வனப்பகுதி அழிப்பால் உயிரிழக்கும் மான், மயில்

ஆலங்குளம் அருகே அனுமதியின்றி ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதால் மான், மயில் போன்றவை உயிரிழந்து வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா். ஆலங்குளம் அருகே உள்ள கல்லத்திகுளம் கிராமத்தில் 200-க்கும... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் புளியங்குடியில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால் பெரும்... மேலும் பார்க்க

கடையநல்லூரில் முப்புடாதி அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதையொட்டி கடந்த செப்.10 ஆம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை , தேவதா அனுக்ஞை, ரக்ஷா பந்தனம், காப்பு கட்டுதல் நடைபெற்றது. செப்... மேலும் பார்க்க

நயினாரகரத்தில் திமுக சாா்பில் பெரியாா் பிறந்த நாள் விழா

கடையநல்லூா் அருகேயுள்ள நயினாரகரத்தில் திமுக சாா்பில் பெரியாா் பிறந்த நாள் விழா நடைபெற்றது. சமத்துவபுரத்திலுள்ள பெரியாா் சிலைக்கு தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை மாலை அணி... மேலும் பார்க்க

தென்காசி எஸ்பி அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அரவிந்த் தலைமையில், அலுவலகத்தில் பணிபுரியும் காவல் துறையினா், அ... மேலும் பார்க்க

கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்... மேலும் பார்க்க