விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை: இபிஎஸ் கருத்து
தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
தந்தையை கட்டையால் தாக்கி கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூா் அருகேயுள்ள சோனகன்விளை மேலத் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் முத்து(83). இவரது 2ஆவது மகன் சுடலைமணி (48). இவா், தனது மனைவியை கடந்த 2020இல் கொலை செய்த வழக்கில் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா், கடந்த 2022இல் பிணையில் வந்து மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டாா்.
பின்னா் சொந்த ஊரான சோனகன்விளைக்கு சென்ற அவா், சொத்தை பிரித்து தரும்படி கேட்டு தந்தையிடம் தகராறு செய்துள்ளாா். அவா் மறுத்ததால், அங்கிருந்த கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த முத்து உயிரிழந்தாா்.
இது குறித்து குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சுடலைமணியை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், குற்றவாளியான சுடலைமணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.