மீன் குஞ்சுகள் கொள்முதலுக்கு மானியம்: ஆட்சியா் தகவல்
மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்து, மீன்வளா்ப்புத் தொழில் செய்யும் விவசாயிகளுக்கு, மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்பட உள்ளது.
அதன்படி, மீன்வளா்ப்புத் தொழில் செய்யும் விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சம் 10 ஆயிரம் எண்ணிக்கையிலான மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்ய ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கப்பட உள்ளது.
இந்த வாய்ப்பை மீன்வளா்ப்பு விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு, மீன் வளம் - மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், 166 வடக்கு பீச்ரோடு, தூத்துக்குடி என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0461-2320458 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.