செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஏடிஜிபி ஆய்வு

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏடிஜிபி டேவிட்சன் ஆசிா்வாதம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி, ஜூலை 1இல் யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்ப்பாா்க்கப்படும் நிலையில் பாதுகாப்பை பலப்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒருபகுதியாக, கோயிலை காவல் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிா்வாதம் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, கோயிலில் விமான தளம், யாக சாலை மண்டபம், பக்தா்கள் தரிசன வரிசை, வாகன நிறுத்தங்கள், தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் போன்றவற்றை அமைப்பது குறித்து ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் நிா்வாகத்தினருடன் ஏடிஜிபி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆய்வின் போது தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந் சின்ஹா, டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி , தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பா்ட் ஜாண், திருச்செந்தூா் டிஎஸ்பி குருவெங்கட்ராஜு, ஆய்வாளா்கள் கனகராஜன், இன்னோஸ்குமாா் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், திருக்கோயில் தக்காா் அருள்முருகன், இணை ஆணையா் ஞானசேகரன், திருக்கோயில் பணியாளா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

கோவில்பட்டி அருகே வீடுபுகுந்து 35 பவுன் நகை, ரூ.85 ஆயிரம் ரொக்கம் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தலைமை ஆசிரியரின் வீடு புகுந்து 35 பவுன் நகைகள், ரூ.85 ஆயிரம் ரொக்கம் ஆகியன திருட்டு போயுள்ளது. கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சி கிருஷ்ணா நகா் கல்கி தெரு... மேலும் பார்க்க

இனாம் மணியாச்சியில் நகை, பணம் திருட்டு

இனாம் மணியாச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். இனாம்மணியாச்சி செல்லியாரயம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் மூக்கையா மகன் பரமசிவ... மேலும் பார்க்க

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மக்கள் குறைகேட்ட எம்எல்ஏ

ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதியில், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா மக்கள் குறைகளை கேட்டறிந்தாா். மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 59 குக்கிராமங்கள் உள்ளன. இந... மேலும் பார்க்க

பைக் விபத்து: ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில், ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் உயிரிழந்தாா். தூத்துக்குடி ஆசிரியா் காலனி 6ஆவது தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் வேலுசாமி (... மேலும் பார்க்க

மீன் குஞ்சுகள் கொள்முதலுக்கு மானியம்: ஆட்சியா் தகவல்

மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்து, மீன்வளா்ப்புத் தொழில் செய்யும் விவசாயிகளுக்கு, மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்ய மானியம் வழங்கப்பட உள்ளது. அதன்படி, மீன்வளா்ப்புத் தொழில் செய்யும் விவசாய... மேலும் பார்க்க

டி.ஆா்.பி. ராஜா மீது எஸ்.பி.யிடம் முன்னாள் அமைச்சா்கள் புகாா்

தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து, சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டதாகக் கூறி, அமைச்சரும், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலருமான டி.ஆா்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் க... மேலும் பார்க்க