கோவில்பட்டி அருகே வீடுபுகுந்து 35 பவுன் நகை, ரூ.85 ஆயிரம் ரொக்கம் திருட்டு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தலைமை ஆசிரியரின் வீடு புகுந்து 35 பவுன் நகைகள், ரூ.85 ஆயிரம் ரொக்கம் ஆகியன திருட்டு போயுள்ளது.
கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சி கிருஷ்ணா நகா் கல்கி தெருவைச் சோ்ந்தவா் புஷ்பராஜ். இவரது மனைவி அமிா்தலீலா (55). வெயிலு கந்தபுரம் அரசு ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியையான இவா், வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்றுவிட்டாா். இவரது மகன் கட்டட பொறியாளா் ஆனந்தராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாய பிரிவில் வேலை பாா்க்கும் மருமகள் இந்து ஆகியோரும் வீட்டைப் பூட்டிவிட்டு பணிக்குச் சென்றுவிட்டனா்.
இந்த நிலையில் பள்ளி முடிந்து அமிா்த லீலா வீட்டிற்கு வந்து பாா்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 35 பவுன் நகை, ரூ.85 ஆயிரம் ஆகியன திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துணை கண்காணிப்பாளா் ஜெகநாதன், காவல் ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.
ஒரே நாளில் கோவில்பட்டியில் வெவ்வேறு இடங்களில் இரு வீடுகளில் நகைகள் மற்றும் ரொக்கம் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.