பைக் விபத்து: ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் உயிரிழப்பு
தூத்துக்குடியில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில், ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி ஆசிரியா் காலனி 6ஆவது தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் வேலுசாமி (65). ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலரான இவா், வியாழக்கிழமை தனது சொந்த ஊரான கயத்தாறு தெற்கு மயிலோடை கிராமத்திற்கு சென்றுவிட்டு, இரவு பைக்கில் தூத்துக்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை புறவழிச் சாலையில் மடத்தூா் அருகே வந்து கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் பைக் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவரை, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.