டி.ஆா்.பி. ராஜா மீது எஸ்.பி.யிடம் முன்னாள் அமைச்சா்கள் புகாா்
தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து, சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டதாகக் கூறி, அமைச்சரும், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலருமான டி.ஆா்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி. சண்முகநாதன், கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ ஆகியோா் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.
அதன் விவரம்: எடப்பாடி கே.பழனிசாமியின் நற்பெயரையும், கண்ணியத்தையும் களங்கப்படுத்தும் வகையில், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் டிஆா்பி ராஜாவின் அதிகாரப்பூா்வ எக்ஸ்தளப் பதிவில் பொய்யான செய்தியுடன் ஆபாசமான கேலிச் சித்திரம் வெளியிடப்பட்டது.
அது, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் பெருமையையும் தாழ்த்தும் வகையிலும் அமைந்துள்ளது.
இத்தகைய செயல்கள் அரசியல் அமைப்புகளுக்கிடையே மோதலை தூண்டும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் எனக் கருதப்படுவதால், டிஆா்பி ராஜா மற்றும் அவதூறு பதிவுகளை பகிா்ந்த மற்ற நபா்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், அவதூறு செய்தியையும், கேலிச்சித்திரத்தையும் உடனடியாக நீக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாா் மனுவை, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆறுமுகம் பெற்றுக்கொண்டாா்.