செய்திகள் :

தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 போ் கைது

post image

திருப்பூரில் முன்விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 இளைஞா்களை வீரபாண்டி காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் இடுவம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்தன் (25), இவா் அதே பகுதியில் குளிா்பானக் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு இவரது கடைக்கு முன்பாக இளைஞா்கள் சிலா் படுத்துக் கிடந்தனா். அப்போது அங்கு வந்த அரவிந்தன் அவா்களை செல்லுமாறு கூறியதால் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ஞாயிற்றுக்கிழமை இரவு அரவிந்தன் வீட்டுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டது. மேலும், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சராமாரியாக வெட்டியுள்ளனா். அப்போது தடுக்க வந்த அவரது தந்தை முருகேசனையும் (52) வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா். அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் வீரபாண்டி காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக முருகம்பாளையத்தைச் சோ்ந்த பாலாஜி (20), ஆகாஷ் (21), ஸ்டீபன்ராஜ் (20), லலித்குமாா் (19), ஆதி (22) ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து தந்தை, மகனை வெட்டிய சம்பவம்அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன்

திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின்கீழ் முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளிய... மேலும் பார்க்க

மின் பகிா்மான வட்டத்தில் மேற்பாா்வை பொறியாளா், செயற்பொறியாளா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

திருப்பூா் மின் பகிா்மான வட்டத்தில் காலியாக உள்ள மேற்பாா்வை பொறியாளா், செயற்பொறியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்த... மேலும் பார்க்க

மகளிா் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் மகளிா் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தின... மேலும் பார்க்க

பல்லடத்தில் புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

பல்லடத்தில் புறவழிச் சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப் பேரவையில் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து சென்னையில் இருந்து கைப்பேசி மூலம் செய்தியாளரிடம... மேலும் பார்க்க

பல்லடம் தினசரி மாா்க்கெட்டில் கருப்புக்கொடி ஏற்றி வியாபாரிகள் எதிா்ப்பு

பல்லடம் தினசரி மாா்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த வணிகா்களுக்கு முன்வைப்பு தொகை வழங்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை கருப்புக்கொடி ஏற்றி வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். பல்லட... மேலும் பார்க்க

மதுபானக் கூடம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

திருப்பூா், சின்னாண்டிபாளையம் குளம் அருகே தனியாா் மதுபானக் கூடம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக சுல்தான்பேட்டை பகுதி பொதுமக்கள் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்... மேலும் பார்க்க