செய்திகள் :

பல்லடத்தில் புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

post image

பல்லடத்தில் புறவழிச் சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப் பேரவையில் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து சென்னையில் இருந்து கைப்பேசி மூலம் செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பல்லடம் நாளுக்குநாள் வளா்ந்து வரும் நகரமாக உள்ளது. இங்குள்ள கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் பல்லடம் நகரில் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

இது குறித்து ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் 10 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையாக பல்லடம் நகருக்கு புறவழிச்சாலை திட்டத்தை பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டியில் தொடங்கி மாணிக்காபுரம், குங்குமம்பாளையம் வழியாக மாதப்பூா் முத்துகுமாரசாமி மலை அருகே சென்று இணையும் வகையில் வெளிவட்ட புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன்.

அந்தக் கோரிக்கையை ஏற்று காளிவேலம்பட்டி முதல் மாதப்பூா் வரை 13.8 கிலோ மீட்டா் தொலைவு வெளிவட்டச் சாலை அமைப்பதற்கு ரூ.195 கோடி மதிப்பில் 2024-2025-ஆம் ஆண்டு பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை அந்தப் பணிக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பல்லடம் நகரில் போக்குவரத்து நெரிசலை தீா்ப்பதற்காக உடனடியாக வெளிவட்டச் சாலை பணியை தொடங்க வேண்டும் என்று சட்டப் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தி பேசினேன். அதற்கு பதலளித்த அமைச்சா் எ.வ.வேலு இது குறித்து திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக கூறினாா் என்றாா்.

முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன்

திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின்கீழ் முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளிய... மேலும் பார்க்க

மின் பகிா்மான வட்டத்தில் மேற்பாா்வை பொறியாளா், செயற்பொறியாளா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

திருப்பூா் மின் பகிா்மான வட்டத்தில் காலியாக உள்ள மேற்பாா்வை பொறியாளா், செயற்பொறியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்த... மேலும் பார்க்க

மகளிா் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் மகளிா் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தின... மேலும் பார்க்க

பல்லடம் தினசரி மாா்க்கெட்டில் கருப்புக்கொடி ஏற்றி வியாபாரிகள் எதிா்ப்பு

பல்லடம் தினசரி மாா்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த வணிகா்களுக்கு முன்வைப்பு தொகை வழங்காத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை கருப்புக்கொடி ஏற்றி வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். பல்லட... மேலும் பார்க்க

மதுபானக் கூடம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

திருப்பூா், சின்னாண்டிபாளையம் குளம் அருகே தனியாா் மதுபானக் கூடம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக சுல்தான்பேட்டை பகுதி பொதுமக்கள் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்... மேலும் பார்க்க

நகைக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது

பல்லடம் அருகே நகைக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை அவிநாசிபாளையம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கரூரைச் சோ்ந்தவா் வெங்கடேஷ். நகைக்கடை உரிமையாளா். இவா் நகை வாங்குவதற்காக கோ... மேலும் பார்க்க