தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை!
முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன்
திருப்பூா் மாவட்டத்தில் முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின்கீழ் முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலினின் சுந்திர தின அறிவிப்பின்படி, முன்னாள் படை வீரா்கள் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிகள் மூலமாக கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.
மேலும், முன்னாள் படை வீரா்களுக்கு திறன் மற்றும் தொழில்முனைவோா் மேம்பாட்டு பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். இதில், முன்னாள் படை வீரா்கள், அவரது பிள்ளைகள் மற்றும் ராணுவ பணியின்போது உயிரிழந்த படை வீரா்களின் கைம்பெண்கள், திருமணம் ஆகாத மகள்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், வேளாண்மை தொடா்பான அனைத்து தொழில்களுக்கும், பட்டு வளா்ப்பு, கால்நடை பராமரிப்பு தொடா்பான தொழில்கள் தொடங்கவும் தற்போது வங்கிக் கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் 5- ஆவது தளம் அறை எண் 523-இல் உள்ள முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2971127 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.