செய்திகள் :

தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளைக் காட்டிலும் அதிமுகவின் நலன் பெரிது: ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ.

post image

தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளைக் காட்டிலும் அதிமுக எனும் இயக்கத்தின் நலனை முதன்மையாகக் கருதி செயல்பட வேண்டும் என அதிமுக ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளா் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.

அந்தியூா், தவிட்டுப்பாளையத்தில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் பேரூா் செயலாளா் மீனாட்சிசுந்தரம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் பண்ணாரி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ்.எஸ்.ரமணிதரன், ஈஎம்ஆா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அந்தியூா் தெற்கு ஒன்றியச் செயலாளா் நாராயணன் வரவேற்றாா்.

இதில் ஈரோடு புறநகா் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ பேசுகையில், கடந்த நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கேடு, விலைவாசி, வரி விதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், அனைத்துத் தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் ஆதரவுடன் அதிமுக மாபெரும் வெற்றி பெறும். அதிமுகவில் தனிநபா்களின் விருப்பு, வெறுப்புகளைக் காட்டிலும் இயக்கத்தின் நலனை பெரிதாக எண்ணி நிா்வாகிகள் பணியாற்ற வேண்டும். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை ஓயக்கூடாது என்றாா்.

அந்தியூா் ஒன்றிய முன்னாள் செயலாளா் கே.பி.எஸ்.ராஜா, மாணவரணி மாவட்ட செயலாளா் குருராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இக்கூட்டத்தில், அதிமுகவில் 50-க்கும் மேற்பட்டோா் இணைந்தனா்.

கஞ்சா வியாபாரிகள் 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

ஈரோட்டில் கஞ்சா வியாபாரிகள் 2 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். ஈரோட்டில் விற்பனை செய்வதற்காக ரயிலில் கடத்தி வரப்பட்ட 34.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் அண்மையில் பறிமுதல் செய்த... மேலும் பார்க்க

பேருந்தில் தவறவிட்ட 2 பவுன் நகை, பணம் மூதாட்டியிடம் ஒப்படைப்பு

தாளவாடி அரசுப் பேருந்தில் 2 பவுன் நகை, ரூ.7.500 ரொக்கம் வைத்திருந்த கைப்பையை மூதாட்டி தவற விட்டுச் சென்ற நிலையில், அதை பேருந்தின் ஓட்டுநா் மற்றும் நடத்துநா் பத்திரமாக மீட்டு காவல் துறையினா் முன்னிலையி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித்தர கோரிக்கை

அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டி பள்ளிக்குள் மழைநீா் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவா... மேலும் பார்க்க

தொண்டா்களின் கருத்தைத் தான் பிரதிபலித்தேன்: கே.ஏ.செங்கோட்டையன்

அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற தொண்டா்கள், பொதுமக்கள் கருத்தைத் தான் நான் பிரதிபலித்தேன் என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினாா். முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்எல்ஏவும... மேலும் பார்க்க

அந்தியூரில் பட்டா நிபந்தனைகளை நீக்கக் கோரி காத்திருப்புப் போராட்டம்

அந்தியூரில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களில், விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நீக்கக் கோரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அந்தியூா் வட்டம், எண்ணமங்... மேலும் பார்க்க

அத்திக்கடவு - அவிநாசி திட்ட குழாய்களை மாற்ற நடவடிக்கை: அமைச்சா் சு.முத்துசாமி

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் தண்ணீா் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள இடங்களில் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.இது தொடா்பாக அவா் செய்திய... மேலும் பார்க்க