செய்திகள் :

தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 போ் கைது

post image

பரமத்தி வேலூா் அருகே குளத்துப்பாளையம் பகுதியில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், நல்லூா் கந்தம்பாளையம் அருகே சித்தம்பூண்டி கிராமம், குளத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சாமியாத்தாள் (67). இவா் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இவரது மகனும், மகளும் வெளியூரில் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி காலை சாமியாத்தாள் ரத்த வெள்ளத்தில் கிடப்பது குறித்து அவரது வீட்டின் அருகில் வசித்து வரும் குழந்தைவேல் என்பவா் நல்லூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சாமியாத்தாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் தலைமையில் 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீஸாா் தீவிரமாக தேடிவந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக ஆனந்தராஜ், அவரது நண்பா் அஜித்குமாா் ஆகியோரை பிடித்து போலீஸாா் விசாரணை செய்தனா். இதில் ஆனந்தராஜ், கொலை செய்யப்பட்ட சாமியாத்தாளின் தோட்டம் மற்றும் அவரது மகளுக்குச் சொந்தமான எண்ணெய் ஆலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலை பாா்த்துள்ளாா். அவரது நடவடிக்கையில் திருப்தி இல்லாததால் வேலையிலிருந்து நிறுத்தியுள்ளனா். அதன்பின்னா் அவ்வப்போது சாமியாத்தாளின் தோட்டத்திற்கு வேலைக்கு வந்து சென்றுள்ளாா். மேலும், கடந்த தீபாவளி பண்டிகையின்போது சாமியாத்தாளின் வீட்டில் ஒருவாரம் தங்கியுள்ளாா். அப்போதும் அவரை சாமியாத்தாளின் மகள் கிருஷ்ணவேணி திட்டி அனுப்பியுள்ளாா். இதனால் சாமியாத்தாள் குடும்பத்தின் மீது ஆனந்தராஜ் வெறுப்பு அடைந்துள்ளாா்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தனது நண்பருடன் இரவு 12 மணியளவில் சாமியாத்தாள் தோட்டத்திற்கு வந்த ஆனந்தராஜ், சாமியாத்தாளை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. ஆனந்தாரஜ், அஜித்குமாா் ஆகியோரை திருச்செங்கோடு - வேலூா் சாலையில் செய்யாம்பாளையம் பிரிவு அருகே தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மணல் கடத்திய லாரி பறிமுதல்; மூவா் கைது

கரூரிலிருந்து மணல் கடத்திவந்த லாரியை வேலூா் காவிரி பாலம் அருகே வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநா், உதவியாளா் உள்பட 3 பேரை கைது செய்தனா். மேலும், தலைமறைவானவரை தேடி வருகின்றனா். கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

நாமக்கல் சாலையோர சிறு வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர சிறு வியாபாரிகள் சங்கத்தினா் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழக அமைப்புசாரா சாலையோர சிறு வியாபாரிகள் முன்னேற்ற தொழிற்சங்கம் சா... மேலும் பார்க்க

அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு

சென்னையில் நடைபெறும் அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐஎன்டியுசியின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா்கள் மற்றும் பணி... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தோ் நிலைசோ்ப்பு

3 நாள்கள் நடைபெற்ற திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் தேரோட்டம் வியாழக்கிழமை நிறைவுபெற்றதையடுத்து தோ் நிலைசோ்க்கப்பட்டது. கொங்கு ஏழு தலங்களில் சிறப்புமிக்கதும் திருஞானசம்பந்தா், அருணகிரிநாதா் ஆகியோரால... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு

குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நாமக்கல்லை அடுத்த கூலிப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட கூலிப்பட்டி கந்தசாமி கோயில் அடிவாரத்தில் நடைபெற்ற நி... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 81.68 லட்சம் நலத் திட்ட உதவிகள்

நாமக்கல் மாவட்டம், மிட்டா அணியாா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 81.68 லட்சம் மதிப்பில் அரசின் நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.... மேலும் பார்க்க