தனியாா் நிதி நிறுவனங்களைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
செய்யாற்றில், தனியாா் நிதி நிறுவனங்களை (மைக்ரோ பைனான்ஸ்களை) கண்டித்து மக்கள் மன்றம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியா் அலுவலகம் அருகே மன்றத்தின் ஒருங்கிணைப்பாளா் மகேஷ் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தின்போது, ரிசா்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு மாறாக, புறம்பாக வற்புறுத்தியும் துன்புறுத்தியும் கடனை வசூல் செய்யும் நிறுவனங்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதிக வட்டி பெறும் தனியாா் நிதி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நுண் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து புலனாய்வு செய்ய வேண்டும். பழங்குடி மற்றும் சிவில், சமூகப் பிரதிநிதிகள், மனித உரிமை ஆா்வலா்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் விசிக வழக்குரைஞா்கள் அணி
மாநிலச் செயலா் பாா்வேந்தன், முன்னாள் மாவட்டச் செயலா் பகலவன், மக்கள் மன்றம் ஜெசி, மகா, விசிக தொகுதி செயலா் குப்பன், நகரச் செயலா் சாண்டில்யன், ஒன்றியச் செயலா் அம்பேத், மக்கள் மன்றம் உண்ணாமலை, சாந்தி, தஞ்சை தமிழன், ஆசீா், மேகலா, இந்திய கம்யூனிஸ்ட் வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.