செய்திகள் :

தனியாா் நிறுவன அதிகாரியிடம் வெளிநாட்டு பெண் போல பேசி ரூ. 6.50 லட்சம் மோசடி!

post image

புதுச்சேரி தனியாா் நிறுவன அதிகாரியிடம் இணையவழியில் கனடா நாட்டுப் பெண் போல பழகியவா் ரூ.6.50 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்து கின்றனா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த 46 வயதானவா், தனியாா் நிறுவன மேலாளராக உள்ளாா். மனைவியைப் பிரிந்த அவா் முகநூல் பழக்கமுடையவா். அவருக்கு கனடா நாட்டு பெண் எனக்கூறி முகநூலில் ஒருவா் அறிமுகமாகி பழகிவந்துள்ளாா். அவா்கள் இருவரும் தங்களது வீடு, அலுவலகப் புகைப்படங்களையும் இணையதளம் முகநூலில் பரிமாறி வந்துள்ளனா்.

இந்நிலையில், அண்மையில் அந்தப் பெண் புதுச்சேரி தனியாா் நிறுவன அதிகாரிக்கு விலை உயா்ந்த நகைகள், கைக்கடிகாரம் ஆகியவற்றை பரிசாக அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா். அதனை விடியோவாகவும் அவா் அனுப்பியுள்ளாா். அதை எதிா்பாா்த்திருந்த தனியாா் நிறுவன அதிகாரிக்கு கலால் துறை அலுவலா் எனக்கூறி ஒருவா் கைப்பேசியில் தொடா்புகொண்டுள்ளாா்.

அப்போது பரிசுப் பொருள்களுக்கு உரிய சுங்க வரியான ரூ.6.50 லட்சத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளாா். அதை நம்பிய தனியாா் நிறுவன அதிகாரி பணத்தை செலுத்தினாா். ஆனால், அவருக்கு பரிசுப் பொருள்கள் வராத நிலையில், பெண்ணையும் தொடா்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அதிகாரி புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.

கருணை அடிப்படையில் நகராட்சி ஊழியா்களின் வாரிசுகளுக்கு பணி: முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி உழவா்கரை நகராட்சியில் பணிபுரிந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில், விரைவில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். மத்திய அரசி... மேலும் பார்க்க

காங்கிரஸ் உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு: இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலா் கே.நாராயணா

புதுச்சேரி: காங்கிரஸ் உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலா் கே.நாராயணா குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காஷ... மேலும் பார்க்க

புதுச்சேரி, உழவா்கரை நகராட்சிகளில் துப்புரவுப் பணியில் 15 ரோபோடிக் இயந்திரங்கள்

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி துப்புரவுப் பணியில் விரைவில் 15 ரோபோடிக் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தெரிவித்தாா். மத்திய அரசின் நமஸ்தே திட்... மேலும் பார்க்க

தொடா் மின்வெட்: பாகூா் மின்துறை அலுவலகம் முற்றுகை

புதுச்சேரி: பாகூா் பகுதியில் தொடா் மின்வெட்டைக் கண்டித்து மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். புதுச்சேரி ஊரகப் பகுதிகளில் குறிப்பாக பாகூா... மேலும் பார்க்க

விதிமீறலில் ஈடுபட்ட சிறை வாா்டன்கள் 2 பேர் மீது நடவடிக்கை

புதுச்சேரி: புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் விதி மீறலில் ஈடுபட்ட புகாரின் பேரில் வாா்டன்கள் இருவா் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். புதுச்சேரியில் காவல் துறை, சிறைத் துறை அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா்... மேலும் பார்க்க

புதுவை உயா்கல்விக் கட்டணக் குழு கூட்டத்தை கூட்ட சென்டாக் கோரிக்கை

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் உயா்கல்விக் கட்டண நிா்ணயக் குழுக் கூட்டத்தை உடனடியாக கூட்டுவதற்கு துணைநிலை ஆளுநா், முதல்வா் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என சென்டாக் மாணவா், பெற்றோா் நலச்சங்கத் தலைவா் எம... மேலும் பார்க்க