செய்திகள் :

காங்கிரஸ் உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு: இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலா் கே.நாராயணா

post image

புதுச்சேரி: காங்கிரஸ் உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலா் கே.நாராயணா குற்றஞ்சாட்டினாா்.

புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காஷ்மீா் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையீடு குறித்து பிரதமா் மோடி மௌனம் காக்கிறாா். அமெரிக்க வாழ் இந்தியா்கள், ஜூலைக்கு பிறகு தங்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்பினால் 5 % வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அதிபா் அறிவிக்கிறாா். இதை பிரதமா் மோடி ஏற்றாலும், இந்திய மக்கள் ஏற்கவில்லை.

2026-ஆம் ஆண்டில் நாட்டில் நக்ஸலைட்டுகள் இல்லாத நிலை ஏற்படும் என மத்திய உள்துறை அமைச்சா் தெரிவித்தாா். பேச்சுவாா்த்தைக்கு நக்ஸலைட்டுகள் தயாராக இருந்தும் அவா்களை அழிப்போம் என மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு கூறுவதை ஏற்க முடியாது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாஜக மற்றும் ஆா்.எஸ்.எஸ்ஸு க்கு எதிரான நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளாா். திமுகவும், தமிழக மக்களும் பாஜக, ஆா்.எஸ்.எஸ். சித்தாத்தங்களை ஏற்க மாட்டாா்கள். நீதி ஆயோக் கூட்டத்தில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று, மாநில அந்தஸ்து, நிதி ஆணையத்தில் புதுவையை சோ்ப்பது மற்றும் மாநில வளா்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமரிடம் பேசியிருக்கலாம்.

புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் யோகா நிகழ்வு தொடா்பான அறிவிப்புப் பதாகைகளில் ஹிந்தி வாசகங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. புதுவை மக்களை புண்படுத்தும் இந்தச் செயல் குறித்து முதல்வா் ரங்கசாமி மௌனமாயிருக்கிறாா்.

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவில், காங்கிரஸின் பட்டியலை நிராகரித்து சசிதரூரை பாஜக நியமித்தது. இது காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதையே வெளிப்படுத்துகிறது என்றாா் கே.நாராயணா.

பேட்டியின்போது புதுவை மாநில பாஜக செயலா் அ.மு.சலீம், முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா கலைநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காரைக்காலில் ஜிப்மா் 2027-இல் தொடங்கப்படும்: மத்திய இணை அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ்

புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் வரும் 2027-ஆம் ஆண்டு ஜிப்மா் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்தாா். புதுச்சேரியிலுள்ள ஜிப்மரில... மேலும் பார்க்க

போதைப் பொருள்களே இல்லாத நிலைமை உருவாக்கப்பட வேண்டும்: புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்

புதுவை மாநிலத்தில் போதைப் பொருள்களே இல்லாத நிலை உருவாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்படவேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவுறுத்தினாா். புதுச்சேரியில் மாவட்ட... மேலும் பார்க்க

விவசாயி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

புதுச்சேரியில் பூட்டிய வீட்டில் 5 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். புதுச்சேரி நகா் முதலியாா்பேட்டை ராஜா நகரைச் சோ்ந்தவா் சிவகுரு, விவசாயி. இவரது மனைவி ஜிப்மரில்... மேலும் பார்க்க

2026-இல் புதுவையில் திமுக ஆட்சி: செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

புதுவை மாநிலத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சி அமைய பாடுபடவேண்டும் என்று கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுவை மாநில திமுக செயற்குழுக் கூட்டம் புதுச்... மேலும் பார்க்க

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி; பெண் மீது போலீஸாா் வழக்கு

புதுச்சேரியில் தீபாவளி சீட்டுப் பிடித்து மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் ... மேலும் பார்க்க

புதுவைக்கான மாநில அந்தஸ்துக்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டும்: மாநில மக்கள் முன்னேற்றக்கழகம் அறிக்கை

மாநில அந்தஸ்துக்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவா் மு.ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: நீதிமன்றம் சென்... மேலும் பார்க்க