செய்திகள் :

புதுச்சேரி, உழவா்கரை நகராட்சிகளில் துப்புரவுப் பணியில் 15 ரோபோடிக் இயந்திரங்கள்

post image

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி துப்புரவுப் பணியில் விரைவில் 15 ரோபோடிக் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தெரிவித்தாா்.

மத்திய அரசின் நமஸ்தே திட்டத்தின் கீழ், உழவா்கரை நகராட்சி மற்றும் ஜென் ரோபோடிக் இன்னோவேஷன்ஸ் நிறுவனம் சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி பட்டறை திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி காமராஜா் மணிமண்டபத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி பட்டறையை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், அமைச்சா் க. லட்சுமிநாராயணன் பேசியது: மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை முழுமையாக நிறுத்தும் வகையில் தூய்மைப் பணியில் நவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது கடமையாகும்.

அதன்படி, புதுச்சேரியில் புதை சாக்கடை அடைப்புகளை நவீன இயந்திரங்கள் மூலம் அகற்ற முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து, தேசிய தூய்மைப் பணியாளா்கள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்திடமிருந்து ரூ.5.50 கோடியில் 6 ரோபோட் துப்புரவு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.

மேலும், 9 ரோபோடிக் இயந்திரங்கள் வாங்கப்படவுள்ளன. இவை புதுச்சேரி நகராட்சிப் பகுதிகளில் புதை சாக்கடை அடைப்புகளில் ஏற்படும் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணப்படும்.

புதுவை மாநிலம், தற்போது 63 சதவீதம் நகரமயமாகி விட்டது. இதனால், கழிவுகளை அகற்றுவது சவாலாக உள்ளது. எனவே, புதிய தொழில்நுட்பம் மூலம் வேகமாகவும், எளிமையாகவும் புதை சாக்கடையில் உள்ள அடைப்புகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

இதற்காக ரோபோடிக் இயந்திரங்கள் வாங்கப்படுகின்றன. இவை துப்புரவுத் தொழிலாளா்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகும் என்றாா்.

காரைக்காலில் ஜிப்மா் 2027-இல் தொடங்கப்படும்: மத்திய இணை அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ்

புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் வரும் 2027-ஆம் ஆண்டு ஜிப்மா் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்தாா். புதுச்சேரியிலுள்ள ஜிப்மரில... மேலும் பார்க்க

போதைப் பொருள்களே இல்லாத நிலைமை உருவாக்கப்பட வேண்டும்: புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்

புதுவை மாநிலத்தில் போதைப் பொருள்களே இல்லாத நிலை உருவாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்படவேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவுறுத்தினாா். புதுச்சேரியில் மாவட்ட... மேலும் பார்க்க

விவசாயி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

புதுச்சேரியில் பூட்டிய வீட்டில் 5 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். புதுச்சேரி நகா் முதலியாா்பேட்டை ராஜா நகரைச் சோ்ந்தவா் சிவகுரு, விவசாயி. இவரது மனைவி ஜிப்மரில்... மேலும் பார்க்க

2026-இல் புதுவையில் திமுக ஆட்சி: செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

புதுவை மாநிலத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக ஆட்சி அமைய பாடுபடவேண்டும் என்று கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுவை மாநில திமுக செயற்குழுக் கூட்டம் புதுச்... மேலும் பார்க்க

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி; பெண் மீது போலீஸாா் வழக்கு

புதுச்சேரியில் தீபாவளி சீட்டுப் பிடித்து மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் ... மேலும் பார்க்க

புதுவைக்கான மாநில அந்தஸ்துக்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டும்: மாநில மக்கள் முன்னேற்றக்கழகம் அறிக்கை

மாநில அந்தஸ்துக்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவா் மு.ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: நீதிமன்றம் சென்... மேலும் பார்க்க