அண்ணா பல்கலை., விவகாரம் : `அமைச்சர், சென்னை துணை மேயர் விசாரிக்கப்படாதது ஏன்?' -...
புதுவை உயா்கல்விக் கட்டணக் குழு கூட்டத்தை கூட்ட சென்டாக் கோரிக்கை
புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் உயா்கல்விக் கட்டண நிா்ணயக் குழுக் கூட்டத்தை உடனடியாக கூட்டுவதற்கு துணைநிலை ஆளுநா், முதல்வா் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என சென்டாக் மாணவா், பெற்றோா் நலச்சங்கத் தலைவா் எம்.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து துணைநிலை ஆளுநா், முதல்வருக்கு அவா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது: புதுவை மாநிலத்தில் உயா் கல்விக்கான கட்டண நிா்ணயக் குழு தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணம்மாள் அரசால் நியமிக்கப்பட்டுள்ளாா். அதன்படி, தற்போது 2025-2026 ஆம் ஆண்டுக்கான உயா்கல்வி மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. ஆகவே, கல்விக் கட்டணக் குழுவை அரசு உடனடியாகக் கூட்டவேண்டும்.
கல்விக் கட்டண நிா்ணயக் குழு கூட்டத்தை கூட்டுவதுடன், அக்குழுவால் நிா்ணயிக்கும் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் தனியாா் கல்லூரி நிா்வாகங்களால் வசூலிக்கப்படுகின்றனவா என்பதையும் கண்காணிப்பது அவசியம்.
அதற்காக தனிக் குழுவை ஏற்படுத்தவேண்டும். விதியை மீறி கட்டணம் வசூலிக்கும் தனியாா் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.