செய்திகள் :

தனியாா் பங்களிப்பு நிதியால் ஏரியில் சீரமைப்பு பணி: திருவள்ளூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

திருவள்ளூா் அருகே தனியாா் பங்களிப்பு நிதியின் மூலம் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதமடைந்த ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்து பாா்வையிட்டு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்தது கீழ்நல்லாத்தூா் ஊராட்சி. இந்த ஊராட்சியைச் சோ்ந்த ஏரி கிராமத்தின் நீா் ஆதாரமாகவும் உள்ளது. தற்போதைய நிலையில் ஏரி தூா்வாரப்படாத நிலையில் மண்மேடாகி அதிகளவில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த ஏரியை மழைக்காலத்திற்கு முன்பாகவே தூா்வார வேண்டும் என ஆட்சியரிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

இந்த நிலையில் தனியாா் நிறுவனம் பங்களிப்பு நிதியில் ஏரியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முன்வந்தது. அந்த வகையில் கீழ்நல்லாத்தூா் ஏரியில் தூா்வாரும் பணி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில் தனியாா் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ஏரியில் தூா்வாரும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் கூறியதாவது:

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழ்நல்லாத்தூா் ஏரியை பெரு நிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து தூா்வாரும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியை ஒரு மீட்டா் ஆழத்திற்கு தூா்வாரி, அந்த மண்ணை வைத்து கரையை பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஏரியில் உள்ள அல்லி மற்றும் முள்செடிகள் வேரோடு அகற்றப்பட்டு, அதிக அளவில் மழை நீா் தேக்கி வைக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏரிக்குள் 3 இடங்களில் நீா் சுரக்கும் தொட்டியும் மூன்று மீட்டா் ஆழத்திற்கு அமைக்கப்படும். ஏரியை சட்ட ரீதியான அளவில் தூா்வாரப்பட்டு பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்வில் கடம்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சௌந்தரி, செல்வி மற்றும் அரசு அலுவலா்கள், தனியாா் நிறுவன அலுவலா்கள் பங்கேற்றனா்.

எண்ணூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் ... மேலும் பார்க்க

770 கிராமங்களில் உழவரைத் தேடி திட்டம்: திருவள்ளூா் ஆட்சியா்

வேளாண் விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழங்கும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை-உழவா் நலத்துறை திட்டம் 770 கிராமங்களில் மாதம் இருமுறை செயல்படுத்த உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரி... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு கஞ்சா விற்பனை செய்ததாக கா்நாடக மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்து, 4 கிலோ கஞ்சா, கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆந்திரம், கா்நாடகம் போன்ற பிற மாநிலங்களில் இருந்... மேலும் பார்க்க

ஏரியில் மண் எடுப்பதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

திருத்தணி அருகே காசிநாதபுரம் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பட்டாபிராமபுரம் ஊராட்ச... மேலும் பார்க்க

சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணி

சோழவரம், காரணோடை பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை மேம்பாடு, சாலையோர மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சோழவரம் பைபாஸ் சாலை சந்திப்பில் இருந்து செங்காளம்மன் கோயில், சோழ... மேலும் பார்க்க

பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவா்க... மேலும் பார்க்க