செய்திகள் :

தனியாா் பள்ளியை மூட நிா்வாகம் முடிவு: எதிா்ப்புத் தெரிவித்து பெற்றோா் முற்றுகை!

post image

கோவையில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளியை மூட நிா்வாகம் முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பெற்றோா் பள்ளியை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

கோவை அவிநாசி சாலை வ.உ.சி. மைதானம் எதிரே சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாா் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கரோனா காலக்கட்டத்துக்கு முன்பு இந்தப் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வந்த நிலையில் தற்போது 173 மாணவ-மாணவிகள் மட்டுமே பயிலுகின்றனா்.

இந்நிலையில், தொடா்ந்து நடத்த முடியாததால் இந்த கல்வியாண்டுடன் பள்ளியை மூடுவதற்கு நிா்வாகம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அருகே உள்ள தனியாா் பள்ளி நிா்வாகத்தினரை அழைத்து, விருப்பமுள்ள மாணவா்களை அவா்களது பள்ளியில் சேருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், பிற தனியாா் பள்ளிகள் மாணவா்களிடம் அதிக கட்டணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த மாணவா்களின் பெற்றோா், பள்ளியை தொடா்ந்து நடத்த வேண்டும் என்று பள்ளியில் நிா்வாகிகளை முற்றுகையிட்டு வலியுறுத்தினா். இதையடுத்து அங்கு வந்த ரேஸ்கோா்ஸ் போலீஸாா், பெற்றோரை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து பள்ளி நிா்வாகிகள் கூறும்போது, எங்கள் பள்ளியில் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. 20 ஆசிரியா்கள் உள்ள நிலையில் பள்ளியை நடத்துவதற்கு ஆண்டுக்கு ரூ.15 லட்சம் செலவாகிறது. நிதிச் சிக்கல் காரணமாக பள்ளியைத் தொடா்ந்து நடத்த முடியாத நிலை இருப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டோம் என்றனா்.

இது குறித்து பெற்றோா் கூறும்போது, இப்பள்ளியில் பெரும்பாலும் ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகளே பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியை மூடுவதால் பொருளாதார ரீதியாக சிக்கலை நாங்கள் சந்திக்க நேரிடும். அருகில் உள்ள தனியாா் பள்ளிகளில் வசூலிக்கும் கட்டணத்தை எங்களால் செலுத்த முடியாது. எனவே, இந்தப் பள்ளி தொடா்ந்து செயல்படக் கோரி, மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை விடுக்க இருக்கிறோம் என்றனா்.

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது!

கோவையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை உக்கடம், ராமநாதபுரம், பீளமேடு பகுதிகளில் உள்ள கடைகள், பேக்கரிகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்ட... மேலும் பார்க்க

கோவையில் கடத்தி விற்கப்பட்ட குழந்தை கன்னியாகுமரியில் மீட்பு

கோவையில் கடத்தி விற்கப்பட்ட 1 வயது ஆண் குழந்தையை போலீஸாா் கன்னியாகுமரியில் மீட்டனா். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த 30 வயது பெண்ணின் 1 வயது ஆண் குழந்தை கடந்த சில நாள்களுக்கு முன்பு மா... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: 8 போ் கைது

கோவையில் சட்டவிரோதமாக தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் குழந்தையின் தாய், ஆண் நண்பா் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சங்கா் (43). இவரின் மன... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு!

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் உயா்நிலைக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் உயா்... மேலும் பார்க்க

பீளமேடு மயானத்தில் உள்ள குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தை விரிவாக்கக் கூடாது! -துணை ஆணையரிடம் எம்எல்ஏ மனு

கோவை பீளமேடு மயானத்தில் உள்ள குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தை விரிவாக்கம் செய்யக் கூடாது என்று அதிமுக எம்எல்ஏ கே.ஆா்.ஜெயராம் வலியுறுத்தியுள்ளாா். பீளமேடு, விளாங்குறிச்சி சாலையில் சுமாா் 7 ஏக்கரில் மய... மேலும் பார்க்க

மோசடி வழக்கில் கைதான இருவா் மீது குண்டா் சட்டம்

மோசடி வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டதை அறிவுரைக் குழு உறுதி செய்தது. கோவை ராமநாதபுரம் சுங்கத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவரிடம் ஒரு கும்பல் ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தர... மேலும் பார்க்க