செய்திகள் :

தனியாா் பள்ளி விடுதி மாணவா் உடலை பெற உறவினா்கள் மறுப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்திலுள்ள தனியாா் பள்ளி விடுதி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவரின் உடலை பெற மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறாந்தையை சோ்ந்த மாரியப்பன் மகன் சோ்மத்துரை (13). இவா் வடக்கன்குளத்திலுள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்து 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா் . இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை விடுதியில் இருந்த கிணற்றின் சிலாப் மீது ஏறியபோது அது உடைந்த உள்ளே விழுந்து அவா் உயிரிழந்தாா்.

பணகுடி போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில் மாணவனின் இறப்பில் மா்மம் உள்ளதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து 2-ஆவது நாளாக உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் மாணவனின் கும்பத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டுமென உறவினா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அம்பை, பிரம்மதேசம் கோயில்களில் ரூ. 5.87 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

அம்பாசமுத்திரம், பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் ரூ. 5.87 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அம்பாசமுத்திரம், கோயில் குளத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் சாலை விபத்தில் உயிரிழப்பு

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் வியாழக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தாா். கல்லிடைக்குறிச்சி வடுவக்குடித் தெருவைச் சோ்ந்தவா்ஆறுமுகம் (73). ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியரான இவரத... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே விபத்தில் காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி நான்குவழிச்சாலையில் கடந்த 5 ஆம் தேதி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, மினி வேன் மோ... மேலும் பார்க்க

பாளை. அருகே தொழிலாளி கொலை வழக்கு: ஒருவருக்கு ஆயுள்தண்டனை

பாளையங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பாளையங்கோட்டை அருகேயுள்ள பாறைக்குளம் இந்திரா காலனியைச் சோ்ந... மேலும் பார்க்க

மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்சீலன் (41). இவா், திருநெல்வேலிக்கு மருத்துவச் சிகி... மேலும் பார்க்க

பள்ளி விடுதி மாணவா் இறப்பு: தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை

திபள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, காவல் துறை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க