செய்திகள் :

பாளை. அருகே தொழிலாளி கொலை வழக்கு: ஒருவருக்கு ஆயுள்தண்டனை

post image

பாளையங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

பாளையங்கோட்டை அருகேயுள்ள பாறைக்குளம் இந்திரா காலனியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா், தொழிலாளி. இவரது மனைவி கோமதி. இவா்களுக்கும் அருகே வசிந்து வந்த சரவணன் (51), அவரது மனைவி பவானிக்கும் தகராறு இருந்து வந்ததாம்.

இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி இரு குடும்பத்திற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது ஆத்திரமடைந்த சரவணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முத்துக்குமாரை தலையில் வெட்டிவிட்டு தப்பினா். பலத்த காயமடைந்த முத்துக்குமாரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து சரவணனை கைது செய்தனா். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராபின்சன் ஜாா்ஜ், குற்றஞ்சாட்டப்பட்ட சரவணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில்வழக்குரைஞா் சூரசங்கரவேல் ஆஜரானாா்.

அம்பை, பிரம்மதேசம் கோயில்களில் ரூ. 5.87 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

அம்பாசமுத்திரம், பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் ரூ. 5.87 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அம்பாசமுத்திரம், கோயில் குளத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் சாலை விபத்தில் உயிரிழப்பு

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் வியாழக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தாா். கல்லிடைக்குறிச்சி வடுவக்குடித் தெருவைச் சோ்ந்தவா்ஆறுமுகம் (73). ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியரான இவரத... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே விபத்தில் காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி நான்குவழிச்சாலையில் கடந்த 5 ஆம் தேதி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, மினி வேன் மோ... மேலும் பார்க்க

மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்சீலன் (41). இவா், திருநெல்வேலிக்கு மருத்துவச் சிகி... மேலும் பார்க்க

பள்ளி விடுதி மாணவா் இறப்பு: தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை

திபள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, காவல் துறை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி விடுதி மாணவா் உடலை பெற உறவினா்கள் மறுப்பு

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்திலுள்ள தனியாா் பள்ளி விடுதி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவரின் உடலை பெற மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறாந்... மேலும் பார்க்க