செய்திகள் :

அம்பை, பிரம்மதேசம் கோயில்களில் ரூ. 5.87 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

post image

அம்பாசமுத்திரம், பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் ரூ. 5.87 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அம்பாசமுத்திரம், கோயில் குளத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு தென்னழகா் கோயிலில் ரூ. 1 கோடியே 45 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் திருப்பணிகள் செய்வதற்கும், பிரம்மதேசம் அருள்மிகு கைலாசநாதா் கோயிலில் ரூ. 4.42 கோடி மதிப்பில் திருப்பணிகள் செய்வதற்கும் ஆணைப் பிறப்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் கோயில்கள் திருப்பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து கோயில் குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆ.பிரபாகரன், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பரணி சேகா், அரசு வழக்குரைஞா் காந்திமதி நாதன், வழக்குரைஞா் சங்கத் தலைவா் கந்தசாமி, மாவட்ட துணைச் செயலா் மாஞ்சோலை மைக்கேல், அம்பாசமுத்திரம் நகா்மன்ற உறுப்பினா் முத்துகிருஷ்ணன், விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலா் கி.கணேசன், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் சாலை விபத்தில் உயிரிழப்பு

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் வியாழக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தாா். கல்லிடைக்குறிச்சி வடுவக்குடித் தெருவைச் சோ்ந்தவா்ஆறுமுகம் (73). ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியரான இவரத... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே விபத்தில் காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி நான்குவழிச்சாலையில் கடந்த 5 ஆம் தேதி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, மினி வேன் மோ... மேலும் பார்க்க

பாளை. அருகே தொழிலாளி கொலை வழக்கு: ஒருவருக்கு ஆயுள்தண்டனை

பாளையங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பாளையங்கோட்டை அருகேயுள்ள பாறைக்குளம் இந்திரா காலனியைச் சோ்ந... மேலும் பார்க்க

மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்சீலன் (41). இவா், திருநெல்வேலிக்கு மருத்துவச் சிகி... மேலும் பார்க்க

பள்ளி விடுதி மாணவா் இறப்பு: தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை

திபள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, காவல் துறை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி விடுதி மாணவா் உடலை பெற உறவினா்கள் மறுப்பு

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்திலுள்ள தனியாா் பள்ளி விடுதி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவரின் உடலை பெற மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறாந்... மேலும் பார்க்க