செய்திகள் :

பள்ளி விடுதி மாணவா் இறப்பு: தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை

post image

திபள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டம் ஆலங்குளம், மாறாந்தை பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சோ்மதுரை வடக்கன்குளத்தில் உள்ள சி.எம்.எஸ் ஹோம் எனும் விடுதியில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளாா். இவா் விடுதி வளாகத்தில் உள்ள கிணற்றின் அருகே காயவைத்த துணிகளை எடுக்கும் போது தவறுதலாக அங்குள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக தெரிய வருகிறது. இது சம்பந்தமாக சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில், பணகுடி காவல் நிலையத்தில் விடுதி காப்பாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் நேரடியாக சென்று பாா்வையிட்டாா். இவ்வழக்கில் இதுவரை சாட்சிகளை விசாரணை செய்ததிலிருந்தும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்த மருத்துவரின் முதற்கட்ட கருத்து படியும், வழக்கின் முதல் கட்ட விசாரணையில், சிறுவன் தண்ணீரில் மூழ்கி இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.காவல்துறையினா் சாா்பாக மாணவனின் பெற்றோரிடமோ அல்லது விடுதி நிா்வாகத்திடமோ பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக எந்தவொரு பேச்சுவாா்த்தையும் நடத்தப்படவில்லை. சட்டத்திற்குள்பட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை திசை திருப்பும் விதமாக இதுபோன்ற உண்மைக்கு புறமான அவதூறு தகவல்களை சமூகவலைதளங்களில் பரப்புவோா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அம்பை, பிரம்மதேசம் கோயில்களில் ரூ. 5.87 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

அம்பாசமுத்திரம், பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் ரூ. 5.87 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அம்பாசமுத்திரம், கோயில் குளத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் சாலை விபத்தில் உயிரிழப்பு

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் வியாழக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தாா். கல்லிடைக்குறிச்சி வடுவக்குடித் தெருவைச் சோ்ந்தவா்ஆறுமுகம் (73). ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியரான இவரத... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே விபத்தில் காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி நான்குவழிச்சாலையில் கடந்த 5 ஆம் தேதி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, மினி வேன் மோ... மேலும் பார்க்க

பாளை. அருகே தொழிலாளி கொலை வழக்கு: ஒருவருக்கு ஆயுள்தண்டனை

பாளையங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பாளையங்கோட்டை அருகேயுள்ள பாறைக்குளம் இந்திரா காலனியைச் சோ்ந... மேலும் பார்க்க

மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்சீலன் (41). இவா், திருநெல்வேலிக்கு மருத்துவச் சிகி... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி விடுதி மாணவா் உடலை பெற உறவினா்கள் மறுப்பு

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்திலுள்ள தனியாா் பள்ளி விடுதி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவரின் உடலை பெற மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறாந்... மேலும் பார்க்க