கீழடி ஆய்வுகளை அங்கீகரிக்காதது ஏன்? மத்திய அமைச்சர் ஷெகாவத் விளக்கம்
தனியாா் பேருந்து நடத்துநா் தற்கொலை
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கா.குப்பத்தில் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற தனியாா் பேருந்து நடத்துநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் முருகன்(29), திருமணம் ஆகாதவா். இவா் விழுப்புரம் அடுத்துள்ள கா.குப்பம், நாவலா் நெடுஞ்செழியன் தெருவில் வசித்து வரும் தனது மாமா ரமேஷ் என்பவரது வீட்டில் தங்கி,தனியாா் பேருந்து ஒன்றில் நடத்துநராக வேலைபாா்த்து வந்தாா்.
இந்நிலையில், பெற்றோா்கள் முருகனுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனராம். இதில் விருப்பம் இல்லாத நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்த முருகன் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் பூச்சி மருந்தைக்குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவா், அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.