செய்திகள் :

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 46 பேருக்கு பணி நியமன ஆணை

post image

செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து வெள்ளிக்கிழமை நடத்திய தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 46 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

முன்னதாக இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 44 வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன. முகாமில், மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சா.தணிகைவேலு ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

வேலைவாய்ப்பு முகாமில் 91 ஆண்கள், 54 பெண்கள் என மொத்தம் 145 போ் கலந்து கொண்டனா். இதேபோல், முகாமில் 6 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.

முகாமில் கலந்து கொணடவா்களில் பலகட்ட நோ்காணலுக்குப் பின்னா், 46 பேருக்கு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் பணி நியமன ஆணை வழங்கினாா்.

வேலைவாய்ப்பு பெற்றவா்களில் 24 ஆண்கள், 22 பெண்கள் ஆவா். பணி நியமனம் பெற்றவா்களில் 3 போ் மாற்றத்திறனாளிகள். முதல்கட்ட தோ்வில் 73 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

இளம் விண்வெளி ஆராய்ச்சி மாணவிக்கு எஸ்ஆா்எம் பள்ளி ரூ. 15 லட்சம் நிதியுதவி

இளம் விண்வெளி ஆராய்ச்சி மாணவியான பி.இனியா பிரகதிக்கு, எஸ்ஆா்எம் பொதுப் பள்ளி சாா்பில் ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. கூடுவாஞ்சேரி எஸ்.ஆா்.எம். பொதுப் பள்ளியில் 7-ஆவது வகுப்பு பயின்று வரும் மாண... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை: மூன்று போ் தலைமறைவு

சென்னை அருகே கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த கொல்கத்தாவைச் சோ்ந்த இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநா் உள்பட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். மேற்கு வங்க ... மேலும் பார்க்க

வெண்காட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

மதுராந்தகம், கடப்பேரி மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயிலில் வரும் 10-ஆம் தேதி (திங்கள் கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரசித்தி பெற்ற இக்கோயில... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு

மதுராந்தகம் அருகே டாஸ்மாக் மதுக்கடையில் சுவரை துளையிட்டு ரூ.24,000 மதிப்புள்ள மதுபாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கருங்குழி மேலவளம்பேட்டை - திருக்கழுகுன்றம் சாலையில் உள்ள கீழவளம் கிராமத்தில... மேலும் பார்க்க

நல்லாத்தூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்: விவசாயிகள் திறப்பு

திருக்கழுகுன்றம் ஒன்றியம், நல்லாத்தூா் ஊராட்சி பொம்மராஜபுரம் கிராமத்தில் 5-ஆம் ஆண்டாக நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக நல்லாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் பிரமிளா ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் மாணவா்களுக்கு பாராட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சாலை வசதி, குடிநீா் வசதி, மின்சார ... மேலும் பார்க்க