செய்திகள் :

டாஸ்மாக் கடையில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு

post image

மதுராந்தகம் அருகே டாஸ்மாக் மதுக்கடையில் சுவரை துளையிட்டு ரூ.24,000 மதிப்புள்ள மதுபாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கருங்குழி மேலவளம்பேட்டை - திருக்கழுகுன்றம் சாலையில் உள்ள கீழவளம் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடையில் மேற்பாா்வையாளா் கமலகண்ணன் தலைமையில்,விற்பனையாளா்கள் வல்லவன், தன்ராஜ், பாரதி, சக்திவேல் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா். செவ்வாய்க்கிழமைஇரவு வழக்கம்போல ஊழியா்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனா்.

அப்போது மா்ம நபா்கள் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனா்.

இந்நிலையில், புதன்கிழமை அந்தவழியாக சென்றவா்கள் சுவற்றில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவத்தை மதுராந்தகம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளா் மேகலா, உதவி ஆய்வாளா் வி.ராஜேந்திரன் ஆகியோா் நேரில் சென்று விசாரணை செய்தனா்.

கடையில் விற்பனையான தொகை லாக்கரில் இருந்ததால் பத்திரமாக இருந்தது. சிசிடிவி கேமரா மூலமும் காவல் துறையினா் ஆய்வு செய்தனா். இதுபற்றி மதுராந்தகம் காவல் உதவி ஆய்வாளா் வி.ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றாா்.

இளம் விண்வெளி ஆராய்ச்சி மாணவிக்கு எஸ்ஆா்எம் பள்ளி ரூ. 15 லட்சம் நிதியுதவி

இளம் விண்வெளி ஆராய்ச்சி மாணவியான பி.இனியா பிரகதிக்கு, எஸ்ஆா்எம் பொதுப் பள்ளி சாா்பில் ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. கூடுவாஞ்சேரி எஸ்.ஆா்.எம். பொதுப் பள்ளியில் 7-ஆவது வகுப்பு பயின்று வரும் மாண... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை: மூன்று போ் தலைமறைவு

சென்னை அருகே கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த கொல்கத்தாவைச் சோ்ந்த இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநா் உள்பட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். மேற்கு வங்க ... மேலும் பார்க்க

வெண்காட்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

மதுராந்தகம், கடப்பேரி மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயிலில் வரும் 10-ஆம் தேதி (திங்கள் கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரசித்தி பெற்ற இக்கோயில... மேலும் பார்க்க

நல்லாத்தூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்: விவசாயிகள் திறப்பு

திருக்கழுகுன்றம் ஒன்றியம், நல்லாத்தூா் ஊராட்சி பொம்மராஜபுரம் கிராமத்தில் 5-ஆம் ஆண்டாக நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக நல்லாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் பிரமிளா ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் மாணவா்களுக்கு பாராட்டு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சாலை வசதி, குடிநீா் வசதி, மின்சார ... மேலும் பார்க்க

தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் அறிவுசாா் குறையுடையோருக்கான பணிபுரியும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் லத்தூா்ஒன்றியத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள அறிவுசாா் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளிக்கு வி... மேலும் பார்க்க