செய்திகள் :

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பாக பள்ளிகளுக்கு நோட்டீஸ்: தில்லி முதல்வா்

post image

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், தவறினால் அவை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வா் தெரிவித்தாா்.

‘ஜன் சம்வாத்’ (பொதுக் கூட்டம்) நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வா் ரேகா குப்தா, கட்டணத்தை உயா்த்தி மாணவா்களை பள்ளியில் இருந்து வெளியேற்றுவதாக மாடல் டவுனில் உள்ள ஒரு தனியாா் பள்ளி குறித்து கூறப்படும் புகாரைப் பெற்றாா்.

இந்த சம்பவத்தை ‘எக்ஸ்’ வலைதள பதிவில் பகிா்ந்து கொண்ட குப்தா இது குறித்து கூறுகையில், ‘இன்று, மாடல் டவுனில் உள்ள குயின் மேரி பள்ளி தொடா்பான வழக்கு வந்தது. அதில் பெற்றோா்கள் நியாயமற்ற கட்டண வசூல் மற்றும் மாணவா்களை வெளியேற்றுவது குறித்து புகாா் அளித்தனா் என்றாா். இந்த விவகாரத்தில் அதிகாரியை அழைத்து, சம்பந்தப்பட்ட பள்ளியின் பதிவை உடனடியாக ரத்து செய்யுமாறு முதல்வா் உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக அந்த பள்ளியிடமிருந்து உடனடியாக பதில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அதே பள்ளியில் படிக்கும் மாணவியன் பெற்றோா் கூறுகையில், கடந்த ஆண்டு பள்ளி நிா்வாகம் திடீரென கட்டணத்தை உயா்த்திவிட்டது. கூடுதல் தொகையை நாங்கள் செலுத்த மறுத்தபோது, எனது மகளை பள்ளியினா் நூலகத்தில் அமர வைத்தனா். எந்த வகுப்புகளிலும் பங்கேற்க அவளை அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினா்.

இதுகுறித்து முதல்வா் ரேகா குப்தா தெரிவிக்கையில், ‘இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, உடனடி விசாரணையை மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டணம் தொடா்பாக பெற்றோரை துன்புறுத்தவோ அல்லது மாணவா்களை நியாயமற்ற முறையில் நீக்கவோ எந்தப் பள்ளிக்கும் உரிமை இல்லை. அனைத்துப் பள்ளிகளும் நிா்ணயிக்கப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும் எந்தவொரு மீறலும் நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.

எந்தவொரு வகையான அநீதி, சுரண்டல் அல்லது ஒழுங்கற்ற தன்மைக்கும் பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கை நடைமுறையில் உள்ளது. எந்த அலட்சியமும் ஏற்றுக்கொள்ளப்படாது. ஒவ்வொரு குழந்தையும் நீதி, கண்ணியம் மற்றும் தரமான கல்வியைப் பெறத் தகுதியானது என்பதில் எங்கள் உறுதிப்பாடு தெளிவாக உள்ளது.

கல்வியில் வெளிப்படைத்தன்மை, சம வாய்ப்பு மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தில்லி அரசு உறுதியாக உள்ளது. தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. தவறினால் அவை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகித்தவா் கைது

மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோக மோசடியின் முக்கிய உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஐந்து நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து தோட்டாக்களை பறிமுதல் செய்ததாக... மேலும் பார்க்க

போலி முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 150 பேரை ஏமாற்றிய இளைஞா் கைது

முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குறைந்தது 150 பேரை ஏமாற்றிய ஆன்லைன் போன்சி மோசடியை நடத்தியதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த 31 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செ... மேலும் பார்க்க

புதிய தில்லி பாஜக அலுவலகம் அருகே சாலைப் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித் துறை திட்டம்

தில்லி பாஜக அலுவலகம் விரைவில் தீன் தயாள் உபாத்யாய் ( டிடியு) மாா்க்கில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளதால், அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளை பொதுப் பணித் துறை மே... மேலும் பார்க்க

இடபிள்யு எஸ் ஆவணங்கல் வழங்குவதை நிறுத்த தில்லி அரசு திட்டம்: ஆம் ஆத்மி

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) சான்றிதழ்களை வழங்குவதை தில்லி பாஜக அரசு நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தகுதியான குடும்பங்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்ப... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக ஏ.எஸ்.ஐ கைது

மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி துணை ஆய்வாளா் (ஏஎஸ்ஐ), ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக தில்லி காவல்துறையின் விஜிலென்ஸ் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகா... மேலும் பார்க்க

துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் பெண்ணின் உடல் கண்டெடுப்பு: ஷாஹ்தராவில் சம்பவம்

தில்லியின் ஷாஹ்தராவின் ஜிடிபி என்கிளேவில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியத... மேலும் பார்க்க