செய்திகள் :

தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி: போலீஸ் துப்பாக்கிச்சூடு!

post image

உ.பி.யில் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி துப்பாக்கியால் சுடப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அமன் புத்ரா சந்த் கான் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இன்று அவரை நீதிமன்றத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது பாதுகாப்புக்கு உடன் வந்த போலீஸ் ஒருவரின் துப்பாக்கியை எடுத்த அந்த நபர் தப்பித்துச் சென்றுள்ளார். அவரைப் பிடிக்கச் சென்ற போலீஸை நோக்கி துப்பாக்கியால் அவர் சுட்டதில் போலீஸ் ஜீப் சேதமடைந்தது .

இதையும் படிக்க | ஔரங்கசீப் கல்லறையை இடிப்பதால் எந்தப் பயனும் இல்லை! -மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே கருத்து

இதுகுறித்து ஹத்ராஸ் எஸ்பி கூறுகையில், “நேற்று இரவு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றவாளி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்று நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லும் முன்பு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றோம். அப்போது சிறுநீர் கழிக்க வேண்டுமென்று அனுமதி கேட்டுச் சென்றார்.

திடீரென பாதுகாப்புக்கு வந்த போலீஸின் துப்பாக்கியை எடுத்துத் தப்பிக்க முயன்றார். எங்கள் மீது துப்பாக்கியால் சுட்ட அந்த நபரை நாங்கள் திருப்பிச் சுட்டதில் அவரது வலது காலில் குண்டு பாய்ந்தது” எனத் தெரிவித்தார்.

மாவட்ட மருத்துவமனையில் குற்றவாளி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் போலீஸார் தெரிவித்தனர்.

ஸ்மார்போன் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை!

நடப்பு நிதியாண்டின் கடந்த 11 மாதங்களில் நாட்டின் ஸ்மார்போன் ஏற்றுமதி ரூ. 21.29 லட்சம் கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மின்னணு மற்றும் தொழில் நுட்பத் துறை ... மேலும் பார்க்க

வெறுப்பதற்காக அல்ல மொழி; பல மொழி கற்பது அவசியம்: சந்திரபாபு நாயுடு

வாழ்வாதாரத்திற்காக முடிந்தவரை பல மொழிகளைக் கற்பது மிகவும் அவசியமானது என்றும் மொழி என்பது வெறுப்பதற்காக அல்ல எனவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஹிந்தி மொழி கற்பதற்கு ஆதரவாக அம்ம... மேலும் பார்க்க

ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்கள் கவனத்திற்கு...

இணையதளப் பக்கங்களில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் பல்வேறு வகைகளில் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் உணவுப் பொருள்கள் விநியோக சேவையில் ஈடுபட்டுவரும் பிளி... மேலும் பார்க்க

பணத்தைத் திருப்பிக்கொடு! மோசடியாளரையே ஏமாற்றிக் கதறவிட்ட இளைஞர்!!

சிபிஐ அதிகாரி என்று கூறி ஆன்லைன் மோசடியில் ஈடுபட முயன்ற நபரையே ஏமாற்றி, ரூ.10,000 பறித்த கான்பூர் இளைஞர் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.கான்பூரைச் சேர்ந்த பூபேந்திர சிங் என்ற இளைஞருக்கு, சிபிஐ அத... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலரின் வரலாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டது: மத்திய அமைச்சர்

சுதந்திர போராட்ட வீரர்கள் பலரின் தியாகங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங... மேலும் பார்க்க

வாக்காளர் குளறுபடி, தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க மறுப்பு! எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

வாக்காளர் அடையாள அட்டை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் செய்த குளறுபடி, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிந... மேலும் பார்க்க