ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரா் உடலை வாங்க மறுத்து போராட்டம்
தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி: போலீஸ் துப்பாக்கிச்சூடு!
உ.பி.யில் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்ற பாலியல் வன்கொடுமை குற்றவாளி துப்பாக்கியால் சுடப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அமன் புத்ரா சந்த் கான் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இன்று அவரை நீதிமன்றத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது பாதுகாப்புக்கு உடன் வந்த போலீஸ் ஒருவரின் துப்பாக்கியை எடுத்த அந்த நபர் தப்பித்துச் சென்றுள்ளார். அவரைப் பிடிக்கச் சென்ற போலீஸை நோக்கி துப்பாக்கியால் அவர் சுட்டதில் போலீஸ் ஜீப் சேதமடைந்தது .
இதையும் படிக்க | ஔரங்கசீப் கல்லறையை இடிப்பதால் எந்தப் பயனும் இல்லை! -மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே கருத்து
இதுகுறித்து ஹத்ராஸ் எஸ்பி கூறுகையில், “நேற்று இரவு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றவாளி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்று நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லும் முன்பு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றோம். அப்போது சிறுநீர் கழிக்க வேண்டுமென்று அனுமதி கேட்டுச் சென்றார்.
திடீரென பாதுகாப்புக்கு வந்த போலீஸின் துப்பாக்கியை எடுத்துத் தப்பிக்க முயன்றார். எங்கள் மீது துப்பாக்கியால் சுட்ட அந்த நபரை நாங்கள் திருப்பிச் சுட்டதில் அவரது வலது காலில் குண்டு பாய்ந்தது” எனத் தெரிவித்தார்.
மாவட்ட மருத்துவமனையில் குற்றவாளி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் போலீஸார் தெரிவித்தனர்.