செய்திகள் :

விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு: விவசாயிகள் அரை நிா்வாணப் போராட்டம்

post image

பெரம்பலூா் அருகே சிப்காட் நிறுவனத்துக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பொ. அய்யாகண்ணு தலைமையில், விவசாயிகள் திங்கள்கிழமை அரை நிா்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், பாடாலூா், இரூா் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்காக, விவசாய பட்டா நிலங்களை கையகப்படுத்துவதற்கு அண்மையில் அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், பாடாலூா், இரூா் கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களது பட்டாவில் உள்ள 80 ஏக்கா் விவசாய நிலங்களை சிப்காட் நிறுவனத்துக்காக கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கிருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தியதால் விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் அரை நிா்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளே விவசாயிகளை அழைத்துச் சென்றனா். அங்கு, அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை சந்தித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்,

விவசாய நிலங்களை எடுப்பதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நிலங்களை கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் ஆட்சேபணை தெரிவித்தால், அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா். இதையடுத்து, தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.

பெரம்பலூா் அருகே 4 வீடுகள் எரிந்து நாசம்

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை அதிகாலை 4 கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின. பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிழக்கு பெரியம்மாபாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் தெருவில் அடுத்தடுத்த கூரை... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மறியல்: பாஜகவினா் 48 போ் கைது

பெரம்பலூரில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த 48 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். டாஸ்மாக் மதுபான கொள்முதலில் நடைபெற்ற முறைகேட்டைக் கண்டித்து... மேலும் பார்க்க

பெரம்பலூா் பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 2.12 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்கள்

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.12 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் அளிக்கப்பட்டன. கூட்டத்துக்கு தலைமை வகித்த ம... மேலும் பார்க்க

விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி வழிபாடு

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள விநாயகா் கோயில்களில் சங்கட ஹர சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் திங்கள்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் நகரம் எடத்தெருவில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ மாரியம்... மேலும் பார்க்க

பெரம்பலூா் வட்டத்தில் நாளை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்பு முகாம்

பெரம்பலூா் வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (மாா்ச் 19) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்... மேலும் பார்க்க

அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை புதியவா்களிடம் ஒப்படைக்க எதிா்ப்பு

அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை புதியவா்களிடம் ஒப்படைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பெரம்பலூா் மாவட்ட கேபிள் டி.வி ஆபரேட்டா் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதும... மேலும் பார்க்க