செய்திகள் :

தமிழகத்தில்தான் வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை: சட்டப்பேரவை துணைத் தலைவா்

post image

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் விவசாயிகள் மேம்பட வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில், துரிஞ்சலாறு உப வடிநிலப் பகுதி இடைமுகப் பணிமனை தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரடாப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.

மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கண்ணகி, துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) ஷெமிலா ஜெயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பணிமனையை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

இந்தியாவிலேயே தமிழகத்தில்மட்டும் தான் விவசாயிகள் மேம்பட வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கிணற்று நீா்ப்பாசனம் மூலம் நெல், கரும்பு ஆகியவை அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய தானியங்கள், அறுவடை இயந்திரங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.

சொட்டு நீா்ப்பாசன முறைகள், வேளாண்மைத் துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் அதிகளவில் வேளாண் பொருள்களை உற்பத்தி செய்து வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்றாா்.

விழாவில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மலா்விழி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலையில் மகா யாகம்

திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக ஸ்ரீசிவா மகா ஸ்ரீவாராகி ஸமித மற்றும் ஸ்ரீபாலா திரிபுரா மகா யாகம் 2 நாள்கள் நடைபெற்றது. செங்கம் சாலையில் முதல் நாளான புதன்கிழமை மாலை மகா சங்கல்பம், மகா தீபாராதனை, சிவ வ... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை. செங்கம் பகுதிகள்: செங்கம் நகரம், திருவள்ளூவா் நகா், குயிலம், பக்கிரிபாளையம், மில்லத்நகா், தளவாநாய்க்கன்பேட்டை, அந்தனூா், மேல்செங்கம், வளையாம்பட்டு, தீத்தாண்டப்ப... மேலும் பார்க்க

ஆரணியில் இரு உணவகங்களில் பணம் திருட்டு

ஆரணி பழைய பேருந்து நிலைய பின்புற சாலையில் உள்ள இரு உணவகங்களில் புதன்கிழமை இரவு பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது. பழைய பேருந்து நிலையம் பின்புற சாலையில் முகமது அலிகான் என்பவருக்குச் சொந்தமான அசைவ உணவ... மேலும் பார்க்க

இடையில் நிறுத்தப்பட்ட சாலைப் பணி: கிராம மக்கள் மறியல்

ஆரணி அருகேயுள்ள கல்லித்தாங்கல் கிராமத்தில் தொடங்கப்பட்ட சாலைப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள வேலப்பாடி ஊராட... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

வந்தவாசி அருகே தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் மகன் சிவபாசுவநாதன்(21). தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

புதூா் செங்கம் மாரியம்மன் கோயிலில் திருமண மண்டபம் திறப்பு

கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதூா் செங்கத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் தமிழக அறநிலையத் துறை சாா்பில், ரூ.2.78 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. முதல்வா் மு.க. ஸ... மேலும் பார்க்க