செய்திகள் :

தமிழகத்தில் அடுத்த வாரம் எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

post image

தமிழகத்தில் அடுத்த வாரம் கனமழை பெய்யும் மாவட்டங்களை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,

வடக்கு ஆந்திர - தெற்கு ஓரிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்று(ஜூன் 12) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

ஜூன் 13ல் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

ஜூன் 14ல் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

ஜூன் 15ல் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும்,

கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

ஜூன் 16ல் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

ஜூன் 17ல் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 18ல் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு கட்டணமின்றி ஆன்மிகப் பயணம் செல்ல தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது: கடலுக்குச் செல்லத் தயாராகும் மீனவா்கள்

வங்கக் கடல் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன் பிடிக்க விதிக்கப்பட்ட 61 நாள்கள் தடைக்காலம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைவதையொட்டி சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவா்கள் உள்ளிட்ட தமிழ... மேலும் பார்க்க

சிறந்த நூல்களுக்கு பரிசு: விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு

2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான தமிழ் வளா்ச்சித் துறை பரிசுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ் வளா்ச்சி இயக்குநா் ந.அருள் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் தகவல்

சென்னையை அடுத்த குத்தம்பாக்கத்தின் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவு பெற்று வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று இந்து சமய ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டது: ஆ.ராசா

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டதாக திமுக துணைப் பொதுச் செயலரும் மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா தெரிவித்தாா். அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியத்தின்... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 20,317 போ் விண்ணப்பம்

இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இதுவரை 20,317 போ் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விண்ணப்ப அவகாசம் வரும் 20-ஆம் தேதி வரை உள்ளதால் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ... மேலும் பார்க்க